விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற கூலித் தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான சங்கர், இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார் (39) என்பவருடன் நண்பராகப் பழகி வந்தார். இந்நிலையில், முந்தைய நாள் இரவு, சங்கர் தனது சொந்த ஊரான மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் […]

காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொரு ஆண்டும் பொய்களையும் குழப்பத்தையும் பரப்ப பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் அது தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலை செய்யும் நாடாகவும் இருப்பதாக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் ஐ.நாவில் பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் தனது அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறும் ஆதாரமற்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளார். அத்துடன், […]

இந்து தர்மத்தில், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவ வினைகளை போக்கிக் கொள்வதற்கும், நற் பலன்களை அடைவதற்கும் தானங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. அனைவராலும் அனைத்து தானங்களையும் செய்ய இயலாது என்றாலும், அவரவர் சக்திக்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்ப செய்யும் சிறிய தானங்களும் கூட மகத்தான பலன்களை அளிக்க வல்லவை. தானங்களில் சிறந்தது எது? எதை தானம் செய்தால் நன்மை கிடைக்கும்? எதை தானம் செய்யவே கூடாது? தானத்தில் சிறந்தது […]

திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/– ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000/– லிருந்து ரூ.5,000 ஆக உயர்வு செய்யப்படும் […]

இந்தியாவில் இதய பாதிப்புகள் இன்று மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை (31%) இதய நோய்களாலேயே ஏற்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோயின் பரவல் அதிகரித்து வருவதற்கு நவீன வாழ்க்கை முறை மாற்றங்களும், மரபணு காரணிகளும் பின்னணியில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]