தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது நீண்டகால காதலியான ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சாலை விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார். தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வாலா மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி அருகே அவரது கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் நோக்கி விஜய் தனது லெக்ஸஸில் சென்று கொண்டிருந்தபோது, ​​வலதுபுறம் திரும்பிய ஒரு பொலிரோ கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் […]

உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், வெள்ளை மாளிகை கியேவுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினார். ஒவ்வொரு ஏவுகணையும் சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் […]

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]

உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் […]

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தனது காலணியை வீச முயன்ற ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கறிஞர்களின் வழக்குகளை விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்தது. வழக்கறிஞர் மேடையை அணுகி, தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதி மீது வீச முயன்றார். இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாகத் தலையிட்டு அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்று […]

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டியையை ஒட்டி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]