உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.. […]

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே ஒரு தெருவில் முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த முதலை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக ஒரு காருக்குள் பூட்டப்பட்டது. அதிகாலை 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள நாய்கள் […]

கிரகங்களில் குரு மிகவும் முக்கியமானது. குருவின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர இராசி மாற்றம் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. குரு பகவான் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அது புனர்வசு நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைய உள்ளார். அது ஆகஸ்ட் 30 வரை அங்கேயே இருக்கும், பின்னர் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழையும். குருவின் சஞ்சாரமும் நட்சத்திரத்தில் இந்த பாதங்களின் மாற்றமும் சில ராசிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக […]

மார்ச் 8, 2014 அதிகாலையில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு எல்லாம் இயல்பாக தான் தெரிந்தது. பின்னர் 01:19 மணிக்கு இறுதி வானொலி செய்தி வந்தது, முதல் அதிகாரி ஃபரிக் ஹமீத் அமைதியாக, “குட் நைட் மலேசியன் 370” என்று வழங்கினார். சில வினாடிகள் கழித்து, போயிங் 777 வியட்நாமிய வான்வெளியைக் கடந்தபோது, ரேடாரில் இருந்து நழுவியது. அதன் பின்னர் அந்த […]

உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]