முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]

காலை நடைப்பயிற்சி அல்லது வேறு எந்த உடற்பயிற்சி செய்த பிறகு பெரும்பாலும் தாகம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் யோசிக்காமல் உடனடியாக தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செய்த உடனேயே தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? உடற்பயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடிக்க சரியான நேரம் மற்றும் வழி இருக்கிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. நாம் நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, நமது […]

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட […]

சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், […]

தென் அமெரிக்க நாடான பெலிஸில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கி.பி 350 இல் கராகோலின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளரான தே காப் சாக்கின் கல்லறையை கானாவில் கண்டுபிடித்தனர். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய நகரத்திற்கு அடித்தளமிட்ட கராகோல் என்ற பண்டைய மாயன் நகரத்தில் முதல் ஆட்சியாளரின் அற்புதமான கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்சியாளரின் பெயர் தே காப் சாக். பல தசாப்தங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் […]

மங்களகரமான தினமான இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன. அதன் […]

தினமும் காலையில் குளிப்பது நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். நல்ல சுகாதாரத்திற்காகவும் தினமும் குளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. குளிப்பது முழு உடலிலிருந்தும் கிருமிகளை அகற்றி, இறந்த செல்களை அழிக்கிறது. இது சொறி மற்றும் அரிப்புகளைத் தடுக்கிறது. தினமும் குளிப்பது உடலில் குவிந்துள்ள அழுக்குகளை அகற்றுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு இந்தியரும் ஒவ்வொரு நாளும் குளிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது அவசியமா, ஒருவர் குளிக்காமல் வாழ முடியாதா, குளிக்காமல் உடல் துர்நாற்றம் […]

கடந்த ஜூன் 12ம் தேதி AI171 விமானம் விபத்துக்குள்ளான பிறகு செயல்படுத்தப்பட்ட ‘பாதுகாப்பு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை ஓரளவு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இடைநிறுத்தத்தின் போது, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏர் இந்தியா தனது போயிங் 787 விமானங்களை கூடுதல் சோதனைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு வழியாக விமான வழித்தடங்கள் […]

சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]

இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]