பொது கழிப்பறைகளை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், அவை பெண்களுக்கு சுகாதாரத்திற்கு ஆபத்தானதாக இருக்கலாம். சானிடைசர் மற்றும் டிஷ்யூ பேப்பர்களை எடுத்துச் செல்வது முதல் கழிப்பறை இருக்கைகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்ப்பது வரை, பாதுகாப்பாக இருக்கவும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்துகொள்வோம். நீங்கள் வெளியே சென்று கொண்டிருக்கும் போது பொது கழிப்பறைகள் உயிர்காக்கும், ஆனால் அவை சுகாதாரக் கவலைகளையும் ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு, தொற்று அல்லது அசௌகரியம் […]

புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த மாதத்தில், புதனின் அதிபதியான பெருமாளை வழிபடுவது நம் பாவங்களையும், துன்பங்களையும் நீக்கி நன்மைகளையும், புண்ணியத்தையும் தரும் என நம்பப்படுகிறது. இந்தாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த புதன்கிழமை மற்றும் ஏகாதசி திதி ஆகிய மூன்று சிறப்பான தினங்கள் இணைந்து வருவதால், முதல் நாள் வழிபாடே கூடுதல் […]

பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதல்வர் ஆலோசனைப்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

2025 ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஓமனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீழ்த்திய பிறகு, சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா முன்னேறியுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நேற்று ஓமன் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதிப்பெற்ற முதல் […]

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர்; பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை […]

நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]

வைரங்கள் உலகின் மிகவும் விரும்பப்படும் இயற்கை வளங்களில் ஒன்றாகும். அவை அவற்றின் பளபளப்பு மற்றும் அழகுக்கும், விதிவிலக்கான கடினத்தன்மை மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை. வைரங்கள் வெட்டுதல் மற்றும் துளையிடுதல் மற்றும் மெருகூட்டல் போன்ற பல முக்கியமான தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வைரங்கள் செல்வம், அன்பு மற்றும் கௌரவத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. இன்று உலகில் வைர உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம். ரஷ்யா: ரஷ்யாவில் […]

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட […]

நேபாளத்தின் சுஷிலா கார்கி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெனரல்-இசட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பிற தேவையான செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் தியாகிகளாக அரசு அறிவித்துள்ளது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கவும் முடிவு […]

பாஜக, ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. […]