OPS, TTV Dinakaran, who have withdrawn from the NDA alliance, are in talks with Vijay?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் அண்ணன், இதுகுறித்து வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வேலூர் கஸ்பா பயர் லைன், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 50 வயதுடைய என்.சீனிவாசன் என்பவர் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், […]
வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுமுறை மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் மட்டுமே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்பது உண்மையல்ல. ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தியின் கூற்றுப்படி, சில பானங்கள் உடலில் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். எந்த பானமும் தனியாக ஒரு மந்திர பாதுகாப்பு கவசம் அல்ல என்றாலும், அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலின் இயற்கையான […]
டெல்லியில் ஒரு பெரிய சொத்து பேரம் நடந்துள்ளது. அந்த சொத்து வேறு யாருமல்ல, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம். 17, யோர்க் ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ள மோடிலால் நேரு மார்க் என்று அழைக்கப்படும் லுட்யன்ஸ் பங்களா மண்டலம் (Lutyens’ Bungalow Zone – LBZ)தான். ஆதாரங்களின்படி, இந்த சொத்து சுமார் ரூ.1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. முதலில், அதன் விலை ரூ. 1,400 கோடி […]
ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கியது யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18.08.2025 வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் […]
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம், இனி சொத்துகளைப் பதிவு செய்ய வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. ‘பிரசன்ஸ்லெஸ்’ (Presenceless) என்று அழைக்கப்படும் இந்த புதிய வசதி, முதற்கட்டமாகப் புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையில், விற்பனையாளர்களும், டெவலப்பர்களும் தேவையான அனைத்து ஆவணங்களையும் […]
வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள். வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை […]
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியின் மின்னஞ்சலில் நேற்று காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. […]
எந்த ஒரு வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வணங்குவதுதான் நம் மரபில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால், குலதெய்வ வழிபாடு அவசியம். ஆனால், சிலருக்கு தங்கள் குலதெய்வம் யார் என்பதே தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கான சில எளிய வழிபாட்டு முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : வீட்டு வாசல் வழிபாடு : முதலில், வீட்டின் தலைவாசலில் மஞ்சள், […]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2025- 26) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தேர்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியம் உள்ள […]

