புகைப்பிடிப்பவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் நோய்கள் முதல் இதய நோய்கள் வரை, மோசமான சூழ்நிலைகளில் புற்றுநோய் வரை, இவை புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளாகும். இதுதவிர, புகைபிடிப்பதால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவும் உள்ளது, அது என்னவென்றால் பற்களில் ஏற்படும் கறை. புகைபிடிக்கும் கறைகளுக்கான காரணங்கள்: ஒரு சிகரெட்டில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன: தார் மற்றும் நிக்கோடின். இந்த இரண்டும் […]

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் […]

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு […]

சுப்பிரமணியபுரம் பட பாணியில் பெண் மூலம் இளைஞனை வரவழைத்து மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொன்றதாக உயிரிழந்த ஐடி ஊழியரின் தந்தை கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி கவின். 25 வயதான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே கேடிசி நகரில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து […]

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் […]

“ஐ லவ் யூ” என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் […]