நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் […]

“சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், டாக்டர் மாலூஃப், ஜெர்மனியில் உள்ள ஒரு இஸ்லாமிய இமாம் சொர்க்கம் குறித்துப் பேசும் வீடியோவை பகிர்ந்தார். அந்த இமாம், இஸ்லாமிய இறுதிக்கால கோட்பாட்டில் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றிய தனது கருத்துகளை விளக்குகிறார்.” அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. வீடியோவில் அந்த இமாம் பேசியதாவது, விசுவாசிகளுக்காக சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் காத்திருப்பார்கள் என்ற கருத்து விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியுள்ளது. இவ்வகை கருத்துகள், மதப்பண்பாடுகள், சமத்துவம், சமுதாய […]

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே இச்சம்பவம் குறித்து […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். […]

சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இந்த பயிற்சி வரும் 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் […]

ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காபூல், அதிகரித்து வரும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலாப நோக்கற்ற நிறுவனமான மெர்சி கார்ப்ஸின் புதிய அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தண்ணீர் இல்லாத முதல் நவீன நகரமாக ஆப்கானிஸ்தான் தலைநகரம் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. காபூலில் தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக நகரின் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து […]

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் […]

இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் […]

முதுகலை பட்டதாரிகள் மாதம்தோறும் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் பாடங்களில் முதுகலை டிப்ளமா படிப்பு படிக்கலாம் என தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2 ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன. தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் […]

8-வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்கள், 8-வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. ஆம்.. 8வது சம்பளக் குழுவின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலாளர் நிலை பதவிகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இதனால் 8வது […]