செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கபாலி மகன் கார்த்திக் (21). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (22) என்பவர் பணிபுரிந்து வந்தார். லோகேஷ், கார்த்திக்கின் உறவினர் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி நாளடைவில் அது ஓரினச்சேர்க்கை வரை சென்றுள்ளது. கடந்த சில […]
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது. நேற்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்தது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. ஆனாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் […]
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. இந்த கனமழை மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் வடபழனி, திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 வரை குறைந்துள்ளது. இது மகிழ்ச்சியை கொடுத்தாலும் சின்ன வெங்காயம், பீன்ஸ், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறின. இதனால் அனைத்து தரப்பு மக்களும் […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Joint General Manager / Deputy General Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், RPF அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். […]
ஐஐடி மெட்ராஸ், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது.தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாளாகும். வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் ஆகியோரையும் […]
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் காலமானார். ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.எஸ். ராவ் என்று அழைக்கப்படும் போப்பனா சத்யநாராயண ராவ், ஹைதராபாத்தில் குளியலறையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான அவருக்கு ஜான்சி லட்சுமி பாய் என்ற மனைவியும், சுஷ்மா மற்றும் சீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரது உடல் […]
மழைகாலத்தில் பூண்டை வைத்து துணிகளை உலர்த்துவது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பருவமழை தொடங்கும் போது, துணிகளை உலர்த்துவதுதான் மிகப்பெரிய பிரச்னை. ஈரமான மற்றும் துவைத்த துணிகளை வெளியில் உலர வைக்க முடியாது. உடைகளை வீட்டுக்குள் காயவைத்தாலும் அவை சீக்கிரம் உலருவதில்லை. பல நாட்கள் ஈரமாகவே இருக்கும். ஆனால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. மழைகாலத்தில் துணிகளை உலர்த்துவது எவ்வாறு என்று இங்கு பார்க்கலாம். பொதுவாக, நாம் மழையில் துணிகளை […]
மழைக்காலத்தில் எந்த தேநீர் அருந்துவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்த தொகுப்பில் பார்ப்போம். மழைக்காலம் தொடங்கிவிட்டது, குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால், சிலருக்கு சளி தொல்லைகள் உண்டாகும். அந்தவகையில் சளி இருமல் பிரச்சனைகளில் இருந்து விடுபட பல்வேறு வகையான தேநீர் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். எனவே மழைக்காலத்தில் எந்த தேநீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்ப்போம். துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி […]
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; விஜய்யின் சொல்லுக்கிணங்க இன்று காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். இந்த நாளில் மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு, […]