மதுரையில் ‘கணவனால் கைவிடப்பட்டோர்’ என்று சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சிகளும். லஞ்சம் குறித்து கேள்வி எழுப்பியதற்கும் ‘நான் மட்டுமா லஞ்சம் வாங்குகிறேன்’ என பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் ’கணவனால் கைவிடப்பட்டவர்’ எனச் சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார். ஆனால், மேலமடை கிராம நிர்வாக அலுவலர் ரமணி, சான்றுக்கு கையொப்பம் இடாமல் அலைக்கழித்து […]
தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய ஒளியில் 2500 தன்னார்வலர்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். சிட்னியின் போண்டி கடற்கரையில் இந்த நிகழ்வு நடந்தது. அமெரிக்க புகைப்பட நிபுணர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்த திட்டத்துக்கான இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியர்களை முறையாக தோல் பரிசோதனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்துக்காக கடற்கரை போன்ற […]
நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது . நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்க்கு 306 ரன்களை எடுத்தது இந்தியா. அதிக […]
சென்னை தனியார் கல்லூரியின் பேருந்துக்குள் மாணவிக்கும், பேராசிரியைக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செம்ஞ்சேரியில் தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவிகள் எப்போதும் அடையாள அட்டையை (ஐடி கார்டு) கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும் என்பது கல்லூரியின் விதிமுறை. அவ்வாறு ஐடி கார்டு அணியாத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில், நேற்று இந்தக் […]
சென்னை தீவுத்திடலில் உள்ள அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் தலைமை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் இதோ. பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: Barber, Washer man பணியிடம்: சென்னை காலியிடம்: 2 சம்பளம்: ரூ.18,000 வயது வரம்பு: 18 வயதில் இருந்து 25 வயது வரை கல்வித்தகுதி: 10 அல்லது 12ஆம் […]
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில், தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Library Information Assistant 1 அதிகபட்சம் 27 வயது ரூ.35,400-1,12,400/- […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2ஆம் பாதி ஆட்டத்தின் 61 […]
மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிவாயு உருளை இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது அதற்கு கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் மின்சார இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட […]
தேங்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, புரதச் சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என்று உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் இந்த தேங்காயில் காணப்படுகிறது. தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள், நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிறு குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் சுத்தமான தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. அத்துடன் சிறுநீரக கற்கள் இருக்கின்ற நோயாளிகளும் […]
15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்க மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, 2018 அக்டோபரில், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை இயக்க […]