இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனம் தனது Food டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசான் இந்தியாவில் உள்ள தனது உணவக கூட்டாளர்களிடம், மே 2020 இல் தொடங்கிய அதன் உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, டிசம்பர் 29, 2022 முதல் Amazon Foodஐ நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்தத் தேதிக்குப் பிறகு […]

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை […]

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய […]

மகாராஷ்டிராவில் தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன் (54). இவர், கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கேக் வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு […]

சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஒன்பது பஞ்சாயத்துக்கள், 70 கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்கு, பெரும்பாலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது காஃபி தோட்டம். இந்த தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்களே அதிகம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர், அவர்களது குழந்தைகளை வசதியின்றி அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால், மலை கிராமங்களில் உள்ள சில பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளது. […]

’Cooku with Comali’ புகழ் அம்மு அபிராமி மோசடி புகார் ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபகாலமாக நூதன முறையில் பல பண மோசடி நடந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் நன்மையை தந்தாலும் மறுபுறம் தீமைகளுக்கும் வழி வகுத்து வருகிறது. அதுவும் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இருந்து நவீன திருட்டை காண்பித்து இருப்பார்கள். அவ்வாறு இப்போது ஒரு மோசடியில் […]

தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவ – மாணவியரின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக, தலா 7,500 ரூபாய் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு […]

ஒரு முன்னணி நடிகர்/நடிகை 100 திரைப்படங்களை தாண்டி நடிப்பது என்பது மிகப்பெரிய சாதனைக்குரிய விஷயம். அதே போல் அந்த நடிகர்களின் 100-வது திரைப்படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படும். அதனால், ஒவ்வொரு முன்னணி நடிகர்களும் தங்களது 100-வது திரைப்படத்தின் கதையை மிகவும் கவனத்தோடு தேர்ந்தெடுப்பார்கள். என்னதான் கதையில் கவனம் செலுத்தினாலும் சில நேரங்களில் காலை வாருவதும் உண்டு. அவ்வாறு தங்களது 100-வது திரைப்படத்தில் ஃப்ளாப் கொடுத்த டாப் நடிகர்கள் […]

கமல்ஹாசனுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில், சில நாட்களிலே சண்டை சூடுபிடித்தது. முதல் வாரத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்ட அசீம், இரண்டே வாரத்தில் தனது பக்க ஆதரவை அதிகரித்தார். அவருக்கு போட்டியாக அரசியல் விமர்சகர் விக்ரமனுக்கும் […]

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்ததை அடுத்து, உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல நிர்வாண பூஜை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பூர்ணிமா (25). கடந்த 4 வருடங்கள் முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இப்போது 5 […]