மராட்டிய மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிவாஷினி, விஜய் டிவியிடம் இருந்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் தெரிந்த முகங்கள் பலர் இருக்கின்றனர். இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இரண்டு வாரத்திலேயே வெளியேறினார். பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிகம் பேசப்படும் […]
தெலுங்கு பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக வெளியாகியுள்ள போட்டோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய்தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு டேட்டிங் சென்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. இருவரும் மணப்பெண், மணமகன் கோலத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. […]
விஜய்-எஸ்.ஏ.சி இடையேயான விரிசல் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய்யின் முன்னேற்றத்திற்கும், அவரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவராக அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திகழ்கிறார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க எஸ்.ஏ.சி எடுத்த முயற்சி அளப்பரியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசைவந்துவிட்டது. 10ஆம் வகுப்பு முடித்த பிறகு “சினிமாவில் ஹீரோவாக […]
தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஜபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து […]
விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், இறுதி நாள் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்தது. பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், […]
’Whats App’-ல் உங்கள் அனுமதியின்றி வேறு நபர் திறக்க முடியாதவாறு புதிய ’ஸ்கிரீன் லாக்’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றது. ’Whats App’பயனர்கள் வாட்ஸ் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்கும். சரியான கடவுச் சொல் இருந்தால் மட்டுமே ’Whats App’-ஐ பயன்படுத்த முடியும். இதனால் ’Whats App’-ஐ உங்களைத் தவிர வேறொறு நபரால் பயன்படுத்த முடியாது. இந்த அம்சத்தை விரைவில் […]
மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன் முகமது ஷரீக், சிம்மோகாவில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்த முகமது ஷாரிக், கர்நாடக மாநிலம் சிவமோகா […]
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், நேற்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து […]
இன்னும் 10 நாட்களில் இறந்துவிடுவேன் என பாதிரியார் ஒருவர் பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் […]