பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் போன்ற மதத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு […]

சமீபத்தில் தொடங்கப்பட்ட மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் மீதும் மாடு மோதியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் வந்தேபாரத் ரயில் சேவை சென்னை-மைசூரு இடையே தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இதுதான் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். மும்பை-காந்தி நகர், டெல்லி-இமாச்சல், டெல்லி-கத்ரா, டெல்லி-வாரணாசி என 4 சேவைகள் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் முதல் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் […]

இந்தி மொழியில் வெளியாகும் க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமித்தாபச்சன் மனைவி ஜெயாவுடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மும்பையில் வசித்து வரும் அமித்தாப் பச்சன் 1969ல் குரல் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் நடிகராக அறிமுகமானார். திரைப்படத்தில் நடித்துக்கொண்டே நடிகை ஜெயபாதுரியை 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒருபக்கம் ஜெயபாதுரியும் சினிமா துறையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஜெயபாதுரி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இவர்களுக்கு […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் திட்டத்தை […]

கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு பதில் அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ப்ரியாவுக்கு உயிருக்கு ஆபத்து என்பதை கூறி கால்களை அகற்றி […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதால் ஒருவருக்கொருவர் கண்களை கண்களால் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்படுகின்றார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துளு்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகின்றது. […]

ஒரே ஒரு பொய் கூறியதால் காதலை ஏற்க காதலி மறுத்ததால் ஆத்திரம்அடைந்த இளைஞர் முகத்தில் பீர்பாட்டிலால் குத்தி முகத்தை கொடூரமாக கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) இவர் சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோடெலில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு மகளிர்தங்கும் விடுதியில் தங்கி அவர் பணியாற்றி வந்துள்ளார். சென்னை வேப்பேரி […]

கஞ்சா போதை தலைக்கேறி காதலி ஷ்ரத்தாவை கொலை செய்தேன் என்று அஃப்தாப் தெரிவித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் வீசிய கொடூரமான காதலன் அஃப்தாப் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு ஷ்ரத்தா கெஞ்சி கேட்டு கூட அதை விடவில்லை. ஒரு கட்டத்தில் இதன் காரணமாக இருவருக்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது […]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் மாவட்ட திமுகவினர் பா.ஜ.க.வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் லத்தேரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக இது தேர்தல் சம்மந்தப்பட்ட கூட்டம இல்லை என்றாலும் கூட இதில் சில விஷயங்கள் தேர்தல் பற்றி பேசப்பட்டது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி ஆகியோர் […]

தாவல் திலகம் குஷ்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முரசொலி நாளிதழ் நடிகை குஷ்புவுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பற்றி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பல்வேறு கட்சித்தாவலில் தொடர்கின்றார். தேவையில்லாமல் முதல்வர் பற்றி பேசி வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்திற்குள் […]