ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் […]

பிளஸ்1 மாணவனுக்கு மது ஊற்றி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் டீச்சரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவனின் படிப்பில் மதிப்பெண்கள் குறைய துவங்கியது. மாணவனின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனை அழைத்து இதுகுறித்து பெற்றோர்களும் விசாரித்தனர். மாணவன் […]

இலங்கையில் இருந்து தப்பித்து சென்றபோது பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 306 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இலங்கையைச் சேர்ந்த 306 பேர் கப்பலில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் –வியட்நாம் இடையே நள்ளிரவு கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்து அபாய கட்டத்தில் இருந்துள்ளது. இதையடுத்து அதில் […]

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. இயக்குனர் மணிரத்தினம், தமிழ் சினிமா உலகில் பல உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு இருக்கிறார். இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதற்காக பல தடவை முயற்சித்து தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே […]

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன்  கடைகளில் காலியாக உள்ள 6503 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படும் என   கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட  துறைசார்ந்த அதிகாரிகள் பலர்  பங்கேற்றனர். […]

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரையை நோக்கி நகரும். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவ.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

திருவண்ணாமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடுவதற்காக கடையின் சுவரில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் டாஸ்மாக் […]

சென்னை புதுப்பேட்டை பகுதியில் சாலையோரமாக முகமது பாஷா (26) என்பவர் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வயதில் மூத்த பெண்ணான அமுதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறில் பாஷா குடித்துவிட்டு வந்து அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் விரக்தியடைந்த அமுதா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு […]

திரிபுராவில் செல்போனில் படம் பார்த்துக் கொண்டே இருந்ததால் தாத்தா கண்டித்ததால் வீட்டில் இருந்த 4 பேரையும் 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டம் கமால்பூர் அடுத்த ஷிப் பாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் பாதல் தேப்நாத்(70) , இவரது மருமகள் சுமிதா தேப்நாத் (42), பேத்தி சுபர்ணா தேப்நாத் (10) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தேப்நாத்தின் 15 வயது […]

ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாய் தாளம்மா, மகள் சாவித்திரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்கள் […]