பருப்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், உடலுக்கு நன்மை பயக்கும் பல வகையான சத்துக்கள் நிலவேம்புக் கறியில் காணப்படுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாமிரம் போன்ற பல சத்துக்கள் பருப்பில் உள்ளன… ஆனால் பருப்பை உட்கொள்வது சிலருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பச்சை பயிறு அல்லது பாசி பருப்பை உட்கொள்ளக்கூடாது? […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உயர்‌ கல்வி பயில கல்விக்கடன்‌ பெறுவதற்கு மாணாக்கர்கள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன்‌ பெறலாம்‌. இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள்‌ படிப்பதற்கு கல்விக்‌ கட்டணம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்ற நோக்கில்‌ உயர்‌ கல்வியைத்‌ தொடர, கல்விக்‌ கடன்‌ முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வங்கிகள்‌ மூலமாக கல்விக்‌ கடனுக்கு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகிறது. அந்த […]

மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான […]

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, […]

வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் இன்று அறிமுகம் செய்ய உள்ளார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு […]

சமீபகாலமாகவே மனிதர்கள் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் பேர்மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், மாரடைப்பு போன்ற இருதய நிலைகள் மிகவும் பொதுவானவை. குறிப்பாக வயதானவர்களில், அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் மதிய உணவிற்கு சாப்பிட்ட ஒரு பெரிய உணவில் உங்கள் மார்பு அசௌகரியத்தை நீங்கள் குற்றம் சாட்டலாம் அல்லது அதை அலட்சியப்படுத்தலாம். […]

இது குறித்து முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெருமாள்சாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. இந்தப் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை 2,000ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் […]

அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதல்முறையாக 6-ம் […]

உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில்  யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை […]

சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல்  சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]