வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , ஒளிப்பதிவாளர் , சித்தார்த்தா, படத்தொகுப்பாளர், ஆண்டனி , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் […]
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் சீரமைப்பு பணிகளை காவல்துறையினர் பாதுகாப்போடு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், சிரிவெல்ல பிரசாத், ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து காங்கிரஸ் […]
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களிடையே மொபைல் பேங்கிங் மூலம் நிதி/பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.. யூஎஸ்எஸ்டி சேவைகளை பயன்படுத்தி பயனர்கள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் இப்போது வசதியாக பரிவர்த்தனை செய்யலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. *99# டயல் செய்து, வங்கிச் […]
அதிமுகவில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே ஐகோர்ட் தீர்ப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மூன்று நாட்கள் அவர் டெல்லியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அதிமுக […]
இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் […]
சென்னை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் “வாத்தி”. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தெலுங்கில் “சார்”என்றும், தமிழில் “வாத்தி” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் செய்கிறார். நூலி படத்தொகுப்பு […]
தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள் தபால்காரர்: 59099 […]
இந்தியா,பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், இந்து, முஸ்லீம் இடையே வகுப்புவாதம் வன்முறையாக வெடிதது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது. இந்தியா, பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து ரசிகர்களிடையே மோதல் உண்டானது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் இருக்கும் ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக […]
ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்.. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாடுகளுக்கு […]