சென்னை மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பதிமூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவாயல் வேல் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரின் மூத்த மகள் பூஜா (13) . விருகம்பாக்கத்தில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  காய்ச்சல் இருப்பது உறுதியான […]

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நிலை […]

சென்னையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்த மாணவர் முகிலு விஸ்வநாதன். இவர் மத்தியபிரதேசத்தில் சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து இங்கு தங்கி படித்து வந்த மாணவர் கடந்த […]

பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தனது மூக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் ’முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் நடித்து அந்த படங்கள் வெற்றியானதை அடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படம் நடித்தார். தெலுங்கில் மகரிஷி, ராதே ஷ்யாம் , ஆச்சார்யா , ஒக்கலைலா […]

இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி […]

காதலியைப் பற்றி நண்பன் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டதில் கல்லால் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத உடல் கிடைத்துள்ளது. 22 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட உடலில் சூர்யா, பேட்பாய், பிரதீப் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் […]

எடப்பாடி பழனிசாமி துணிச்சல் இல்லாதவர் என்றும் தானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் நான் அதை […]

தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் கூறுகின்றார். இதை கூறுவதற்கு அவர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். ஒரு […]

”ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என தனியரசு தெரிவித்துள்ளார். கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு நன்றி பாராட்டுகிறது. மத்திய […]