கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் […]
“தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்திரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை” என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ […]
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகில் இருக்கும் அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அபர் ஜிந்தால் (39). இவர் ஒரு மருத்துவர். சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான டெல்லி அருகே இருக்கும் நொய்டாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். அதன் பிறகு நேற்று சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து […]
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆஸ்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்டம்பர் […]
நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் […]
ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. […]
கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை […]
கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனல்டோவை 484 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் ஒரு பதிவுக்கு, அவர் இந்திய மதிப்பில் ரூ.19 கோடி வசூல் செய்வதாக ஒரு தனியார் நிறுவனத்தின் […]
அதிவேக இணைய வசதியை பெற, 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி அலைவரிசையை, தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) […]