முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ‘கழுதை தேய்ந்து […]
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.. தமிழ்நாட்டில் […]
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து நவம்பர் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38%ஆக உயரும்.. […]
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பதும், உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றுவதும் அவசியம். உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்வது மட்டுமின்றி மாசுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதால், உங்கள் உடல் சரியாக செயல்பட இயற்கையான ரத்த சுத்திகரிப்பு உணவுகள் அவசியம். எனவே, உடலின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க மற்றும் நோய்களை அகற்ற, ரத்த சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. ரத்த சுத்திகரிப்பு காரணமாக, சிறுநீரகம், […]
தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த SSC – CGL தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தால் 20,000-ற்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை […]
எண்ணற்ற பயன்கள் நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செலினியம் , விட்டமின் டி, பி 6, பி12 மற்றும் துத்தநாகம் , இரும்பு , தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்களின் களஞ்சியமாக முட்டை வரையறுக்கப்படுகின்றது. கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் […]
விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி […]
தான் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் செய்திகள் வந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், கட்சித் தலைமையகத்திற்கு அவரிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றார். […]
சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரேமா சீனிவாசன் அவர்கள் காலமானார் தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் ஆகியோரின் தாயாரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பிரேமா சீனிவாசன் அவர்கள் காலமானார். முன்னாள் சுங்கத்துறை அதிகாரியான கே.ரங்கசாமியின் மகளான பிரேமா, டிவிஎஸ் குழும நிறுவனர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசனை மணந்தார். Pure Vegetarian CookBook உட்பட பல புத்தகங்களை எழுதியவர் பிரேமா. சுற்றுச்சூழல், தத்துவம் மற்றும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஆர்வத்திற்கு பெயர் […]