வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருப்பதால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதால், சீரியல் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசனும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, தமிழில் […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]
அரசு விழாவில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி, மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் , இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேருக்கு தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷகிதா பானு இவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உறவினர் பெண்ணான 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் […]
சென்னை, மேடவாக்கம், பாபு நகர் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (50). இவர், சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நிலம் விற்பதாக கூறி 65 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஜெகன்நாதன் மதுரையில் தனக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை சண்முகத்திற்கு, கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக பொது அதிகார ஆவணம் தயாரித்து, 65 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் […]
ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் மூலம் ரூ.79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் (Flipkart) செயலியில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமரா ஒன்றை பார்த்து, கிரெடிட் கார்ட் மூலம் பணம் […]
ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், தனக்கு மருந்து கொடுங்கள் இல்லை… ஊசிபோடுங்கள்… ஆனால், என்னை எப்படியாவது போட்டியில் ஆடுமளவிற்கு தயார்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் […]