சென்னையில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி இன்று கிலா ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.270 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்பட் நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான […]
சலூன் கடைக்காரர் முடி வெட்டும் போது நீங்கள் சொன்னபடி வெட்டாமல் தலையில் சம்பவம் செய்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். இது போல நடந்தால் நஷ்ட ஈடு பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… முடி வெட்டும் போது நீங்கள் குறிப்பிட்ட முறையில் தான் வெட்ட வேண்டும் எனப் பக்கம் பக்கமாகச் சொல்லியும், சலூன் கடைக்காரர் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற ரேஞ்சில் முடி வெட்டியிருப்பார். நம்மில் […]
எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை […]
கனமழை காரணமாக கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இராணி தாலுக்காவில் உள்ள குரும்பன்மொழி பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 250 ஆதிவாசி குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால், பம்பை நதி, கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர் கனமழையால் கண்ணூர், திருசூர், கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி, […]
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஜோதிக்கும் எனக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது. ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில், […]
தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை குறைந்தது 4 மணி நேரமாவது […]
பொதுமக்களை பொறுத்தவரையில் தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் வீடு கட்டுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவது, மேலும் கட்டிய வீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டுக் கடனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் முயற்சி பெரிதாக பலனளிப்பதில்லை. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற 6 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் […]
சப்பாத்தி கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது. சப்பாத்தி கள்ளியில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் நார்சத்தும் நிறைந்து உள்ளது. சர்க்கரை நோய்க்குக் சப்பாத்திக் கள்ளிப் பழம் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. பழத்தை […]
கியூ ஆர் ஸ்கேன் முறைப்படி ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சாட் தகவல்களை முழுமையாக மற்றொரு போனிற்கு மாற்றம் செய்யும் புதிய qr கோடு சார்ட் ட்ரான்ஸ்பர் என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலிகளில் வாட்ஸ் அப் முன்னிலையில் இருந்து வருகிறது. செய்திகளை பரிமாறிக் கொள்வதுடன், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான மக்கள் […]