தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் அரையிறுதியில் வங்கதேச அணியை 1-0 என வீழ்த்தி முதல் அணியாக குவைத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோல் […]
ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்வில் நாள்தோறும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அத்தியாவசியமான முக்கிய தேவை உணவு. அப்படி இருக்கக்கூடிய உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதுடன் உணவு உட்கொள்ளும் போது சில விடயங்களை செய்யாமல் தவிர்ப்பது அந்த சத்துக்கள் உடலில் முழுமையாக சென்று சேர உதவியாக இருக்கும். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். உணவு உட்கொள்ளும் முன்பு தண்ணீர் சாப்பிடுவதால் உடல் பெரிதாகி சாப்பாடு […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் எதிர் வரும் 15.7.2024 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கல்விக்கண் […]
திரையரங்கின் கட்டணங்கள் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் கொடுத்த மனுவில்; மல்டி பிளக்ஸ் ஏசி தியேட்டரில் 150 ரூபாய் டிக்கெட்டை 250 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும் மல்டி பிளக்ஸ் ஏசி இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை 150 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாததியேட்டர்களில் கட்டணத்தை 80 ரூபாயில்இருந்து 120 […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 08.07.2023 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 […]
நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண்ணின் காருக்கு சாலை வரி, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் பெண் தனக்கு சாலை வரி, ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கவும், காரை பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு வழங்குவது போல் […]
இந்த பாரதிய பசுபாலன் லிமிடெட் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்தில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் தற்போது 2870 சர்வேயர் மற்றும் 574 சர்வேயர் இன்சார்ஜ் பதவிகள் காலியாக இருக்கின்றனர். ஆகவே இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 2870 சர்வேயர், 574 சர்வேயர் இன்சார்ஜ் என ஒட்டுமொத்தமாக 344 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 5 என்று […]
நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வுசெய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது. […]
திருமணத்தில் மணப்பெண் விருந்தினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் தாயார், சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதியுள்ளார். இந்த சம்பவம் மணமகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இருவரின் செயல்களினால் விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து, மணமகனின் குடும்பத்தினர் கூறுகையில், […]
வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா என்றும் வியக்க வைக்கும். அப்படி ஆச்சரியங்களை அள்ளி வைத்த படங்களில் ஒன்று தான் ‘சுப்பிரமணியபுரம்’. சசிகுமார் என்ற இயக்குநரை, நடிகரை, தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய படம் அது. அந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 2008ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாகி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தப் படம். இதில், […]