ஒருபக்கம் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏறுமுகமாக […]
வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் […]
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே கோடை காலம் என்பது கோடைகாலமாகவே காட்சி தரவில்லை. மாறாக பருவ மழை காலமாகவே காட்சி தந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் அவ்வப்போது மழை வந்து அந்த சிரமத்தை தணித்து விடுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை அடுத்த 1 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Apprenticeship Training பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜூலை […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் 400 […]
இன்றைய காலகட்டத்தில் படிக்காமல் இருக்கும் அவர்களுக்கு கூட வேலை கிடைத்து விடுகிறது. ஆனால் வங்கியில் கடன் வாங்கி 4 வருடம் அல்லது 3 வருடம் கஷ்டப்பட்டு படித்த நபர்களுக்கு இன்று சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, படித்துவிட்டு சிலர் விரக்தியில் இருக்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால் அந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது படித்தவர்களின் கண்களில் படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. […]
டாட்டா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியரும் ஒன்று. இது ஒரு எஸ்.யூ.வி ரக கார் என்று கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தை கொண்டுதான் டாட்டா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. இதன் காரணமாக தானோ என்னவோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சி தருகிறது. இந்த மாடலின் எலக்ட்ரிக் வர்ஷனையே டாடா […]
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர். அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது […]
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் computer operator and programming assistant மற்றும் இதர பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது Indian railways catering and tourism corporation அறிவித்துள்ள பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐ.ஆர்.டி.சி அறிவிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 16 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian railway catering and tourism corporation பதவியின் பெயர்: computer operator […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]