இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் computer operator and programming assistant மற்றும் இதர பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது Indian railways catering and tourism corporation அறிவித்துள்ள பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐ.ஆர்.டி.சி அறிவிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 16 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian railway catering and tourism corporation பதவியின் பெயர்: computer operator […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள […]

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், உலகில் அமைதியையும், சமாதானத்தையும் பரப்பிய தூதுவராக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று. விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை. விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல்கொண்டு யோகி அரவிந்தர் வரையில் பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விவேகானந்தர் ஒரு ஆதர்ச […]

பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம், என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இன்றைய நவீன காலத்திலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் அவர்களும் கடந்து செல்கிறார்கள். அதேபோன்று, நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று […]

ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. […]

உலகின் பணக்கார கிராமம் என்று அழைக்கப்படும் குஜராத் மாவட்டத்தில் உள்ள மதாபர் என்ற கிராமத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும் குடிசைகளும், வேட்டி, துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். அந்தவகையில் இந்தியா என்பது விவசாயத் தொழிலை அடிப்படையாக கொண்ட நாடு. வசதிகளும், வாய்ப்புகளும் நகரங்களில் தான் இருக்கும் என்பது பொதுவான எண்ணம். இந்த எண்ணத்தை புரட்டிப் […]

செந்தில்‌ பாலாஜி மீது ஊழல்‌ தடுப்பு சட்டத்தின்‌ கீழ்‌ சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்‌ வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய 4ஜி போனான “ஜியோ பாரத்” போனை ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தியது. குறைந்த பட்ஜெட் சாதனங்களுடன் பயனர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் 250 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் 2ஜி மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். அது போன்ற மொபைல்கள் இணைய வசதியை பெற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தை அணுகுவது ஒருவரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் […]

ஆண்கள் தேசிய ஆணையம் அமைக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் […]

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் […]