உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாக மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் அறிவுசார் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” 15.7.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக […]

அழகான புன்னகை அனைவரின் ஆளுமையையும் மேம்படுத்துகிறது . ஆனால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கினால், முகம் வெளிர் நிறமாகத் தெரிகிறது . காபி , தேநீர், புகையிலை, பான் மசாலா அல்லது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும் . இருப்பினும், மஞ்சள் இயற்கை வைத்தியங்களில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மஞ்சள் பற்களின் மஞ்சள் அடுக்கை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல் , […]

காதலனுடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த காதலி, சாட்ஜிபிடி-யிடம் ஆலோசனை பேரில் விசா இல்லாமல் சென்று விமானத்தை தவறவிட்டதால் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேரி கால்டாஸ் (Mery Caldass) என்பவர், தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு விசா தேவைப்படும் என்று ChatGPT-யிடம் அட்வைஸ் கேட்டுள்ளார். அதற்கு, விசா தேவையில்லை என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது. […]

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரையுலகில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியவர். தனது நடிப்புத் திறமையால், தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த இவர், […]

பச்சிளங் குழந்தைகளின் பிறவியிலேயே ஏற்படும் பாத குறைபாடுகளுக்கான மருத்துவப் பயிற்சி ஜிப்மர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கால பாத நோயான கிளப்-ஃபூட் உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. இந்த வகை குறைபாடுகளுக்கு முதன்மை மருத்துவ சிகிச்சையான “பொன்செட்டி முறை” ஆகும். இந்த முறையில் அறுவைச் சிகிச்சை ஏதுமின்றி பிளாஸ்டர் போடுவதன் மூலம், மேற்கொள்ளப்படும் சிகிச்சை பச்சிளங்குழந்தைகளின் பாதங்களை 6 முதல் 7 வாரகாலத்தில் […]

ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]

பெண் தொழில்முனைவோருக்கான உத்யம் சகி தளத்தில் 4,535 பேர் பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு நிதி திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு நிறுவனங்கள் குறித்து தகவல்களை வழங்கவும், பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் https://udyamsakhi.com/ என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் பெண் தொழில்முனைவோர்கள் தங்களுடைய வர்த்தகங்களைத் தொடங்கவும், கட்டமைக்கவும், […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுமார் […]

சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. பள்ளி பிரிவிற்கு 01.01.2007 […]