இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. நம் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு உள்ளது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன. இந்நிலையில்,ச் இந்திய கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்தினால் 20% TCS (Tax Collected at Source) வரி […]

மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]

பிரிட்டிஷின் கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லி சொகுசு கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதிக விலை கொண்ட சொகுசு கார்களை தயார் செய்வதில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் மிகவும் விலை கொண்ட சொகுசு கார் Bentley mulsanne EWB Centenary edition ஆகும். இந்த கார் அண்மையில் பெங்களூருவில் காணப்பட்டது. இந்த காரின் விலை 14 கோடி ரூபாய் என்று […]

தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் மட்டும் தான் மகப்பேறு விடுமுறையை பெறுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் தற்காலிக பெண் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு […]

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. மனித வள மேலாண்மை துறையின்‌ 2021-2022-ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கை தொடர்பான உரையின் போது, நிதி அமைச்சர் வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப்‌ பணியிடங்களில்‌ பின்வரும்‌ இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌ என சட்டமன்ற பேரவையில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால்‌ பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்த இளைஞர்கள்‌, முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகள்‌, தமிழக அரசுப்‌ பள்ளிகள்‌ […]

2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சேவை வழங்கலுக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார  பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முக  அங்கீகாரப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்வது இது தொடர்ந்து இரண்டாவது மாதமாகும். முக அங்கீகரிப்பு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மேல்நோக்கி சென்றவண்ணம் உள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகும். இந்திய தனித்துவ அடையாள  ஆணையத்தால், உள்நாட்டில்  உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, எம்எல்  அடிப்படையிலான முக  அங்கீகார தீர்வு, இப்போது மாநில அரசு துறைகள், மத்திய அரசில்  உள்ள அமைச்சகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட 47நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிது.  ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளைப் பதிவு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது;  பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்குவதற்காகவும். பல அரசுத் துறைகளில் ஊழியர்களின் வருகையைக் குறிக்கவும், சில முன்னணி வங்கிகளில் தங்கள் வணிக நிருபர்கள் மூலம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் தூக்கி எறிபவர்களுக்கு இன்றுமுதல் அபராதமும், தண்டனையும் விதிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அவ்வாறு, நாளை முதல் (ஜூலை 1) வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது […]

ரேஷன் கடைகளில் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று கர்நாடகா அரசு இன்று முதல் தொடங்க உள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்வதற்கான சக்தி திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 90 சதவீத ஏழைப் பயனாளிகளின் வங்கி […]

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் […]