2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிப் பேச்சுகளும் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதால், தங்களின் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளத் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் தற்போதைய தொகுதிகளை மாற்றிக் களம் காணத் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுகவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தனது […]

நிதிச் சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ நிதிப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நிதிப் பாதுகாப்பை அடைய, சேமிப்பது அல்லது முதலீடு செய்வது அவசியம். இருப்பினும், சமீப காலங்களில், சேமிப்பு மற்றும் முதலீடுகள் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் முதலீடு செய்வதற்கு தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களே சிறந்த வழியாகும். இந்த சேமிப்புத் திட்டங்கள் மூலம் அரசாங்கம் பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி […]

உடல் உழைப்பற்ற நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் செய்யும் ஒரு மிகச்சிறிய மாற்றம் நம் ஆயுளைப் பல ஆண்டுகள் நீட்டிக்கும் வல்லமை கொண்டது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 2026-ஆம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற ‘லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் கூடுதலாக வெறும் 5 நிமிடங்கள் மட்டும் நடப்பாரேயானால், அவர் அகால மரணமடையும் அபாயம் சுமார் 10 […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர பொறியியல் பட்டதாரியான அர்ஜுன் மற்றும் மீரா ஆகியோரின் 6 மாத கால காதல், ரத்தக் கறையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், மீராவின் கடந்த காலம் குறித்த ரகசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இருவரும் விடுதி அறையில் இருந்தபோது, மீரா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அர்ஜுனிடம் தெரிவித்துள்ளார். 6 மாதங்களாக தான் உருகிக் […]

நடிகர் சிலம்பரசன் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும் தற்போதும் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். அந்த வகையில் நடிகர் சிம்புவின் சமீபத்திய வெற்றிப் படங்களில் ஒன்று ‘மாநாடு’ (2021). வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் […]

சமையலறையில் அஞ்சறைப் பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்கும் பூண்டு, வெறும் சுவைக்கான பொருள் மட்டுமல்ல; அது ஒரு நடமாடும் மருத்துவமனை. பூண்டுப் பிரியர்கள் மத்தியில் அடிக்கடி எழும் ஒரு கேள்வி “சாதாரண வெள்ளை பூண்டு சிறந்ததா அல்லது மலை பூண்டு சிறந்ததா?” என்பதுதான். இந்த இரண்டு வகைகளிலும் ஒளிந்துள்ள அபூர்வ மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம். மலை பூண்டு : இமயமலை தொடரின் […]

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கணவனைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெகுசராய் மாவட்டத்தின் ரகுநந்தன்பூர் கிராமத்தை சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவரே இந்தச் செயலில் ஈடுபட்டுச் சிக்கியுள்ளார். சந்தன் குமார் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் கைக்குழந்தையுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். விசேஷம் முடிந்து திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத […]

ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிற்குப் பிறகும் பல இந்தியர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான்: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? என்பது தான்.. மதுபானம் மற்றும் சிகரெட் போன்ற பொருட்கள் பொதுவாக இந்த உரையாடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் 2026 பட்ஜெட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய வரி மாற்றங்களைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் மதுபான விலைகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே […]

சாப்பிட்ட உடனேயே கையோடு சூடாக ஒரு கப் டீ குடிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கமாக இருக்கலாம். செரிமானத்திற்கு இது உதவும் என்று பலரும் நம்பினாலும், உண்மையில் இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மெல்லக் கொல்லும் விஷமாக அமையக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேநீரில் உள்ள வேதிப்பொருட்கள் நமது செரிமான மண்டலத்திலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம். தேநீரில் இயற்கையாகவே அமைந்துள்ள ‘காஃபின்’ மற்றும் ‘டானின்கள்’, […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கல்லூரிப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இன்று காலை கல்வி நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டது. பேருந்து பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியை நெருங்கியபோது, எதிரே வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்னல் வேகத்தில் […]