fbpx

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள் :

  1. ஆதார்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு …

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். மேடையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பேசும்போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல் அவர் பேசியதை மேடையில் …

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் சேர்ந்து …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கிடையே, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் …

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பேச்சாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகருமான வாசு விக்ரம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் கடந்த 2013ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அன்றைய பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். …

Lok Sabha: திமுக(DMK) கொடுத்த மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் தான் பெண்கள் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் என வேலூர் எம்பி கதிர் ஆனந்த் பேசியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல்(Lok Sabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைகிறது.7 கட்டங்களாக …

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது . பொதுத்தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காக தலைவர்கள் …

மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரும் நடிகையுமான கங்கணா அற நாவத் ஆகியோருக்கு எதிராக ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறியதால் பாஜக எம்பி திலிப் கோஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.

இவர்களின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் …