fbpx

தேசிய செய்திகள்

  • டெல்லி நில அதிர்வு!. ”பெரிய இமயமலை பூகம்பம்” ஏற்படும் ஆபத்து!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

    ‘Great Himalayan Earthquake’: நேற்று அதிகாலை டெல்லி-என்சிஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பீகார், ஒடிசா மற்றும் சிக்கிம் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எந்தவொரு காயமோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. வீடுகள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் வைரலாகின. இருப்பினும், இந்த நில அதிர்வு, ‘பெரிய இமயமலை பூகம்பம்’ குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது, சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதியில் ஒரு பெரிய டெக்டோனிக் அதிர்ச்சி குறித்து நில அதிர்வு ஆய்வாளர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8-க்கு மேல் இருக்கும் என்றும், டேராடூன் முதல் நேபாளத்தின் காத்மாண்டு வரை உள்ள பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் இந்த நிலநடுக்கம் நிகழலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதன் தீவிரம் முழு கங்கை சமவெளிகளிலும் மற்றும் டெல்லி NCR, சிம்லா, பாட்னா போன்ற மிகப்பெரிய இந்திய நகரங்களிலும் உணரப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், பில்ஹாம், இமயமலை ‘சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை’ பெரிய நிலநடுக்கங்களை சந்தித்து வருவதாகக் கூறியிருந்தார். கடந்த 2,000 ஆண்டுகளில், இமயமலைப் பகுதி வழக்கமான இடைவெளியில் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 8.7 ரிக்டர் அளவில் இருந்தன.

    ஆனால் கடந்த 70 ஆண்டுகளில், இமயமலையில் ரிக்டர் அளவுகோலில் 8க்கு மேல் எந்த நிலநடுக்கமும் பதிவாகவில்லை என்று நிபுணர் கூறியிருந்தார். நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. காத்மாண்டு நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நேபாள தலைநகரின் சில பகுதிகள் முற்றிலுமாக தரைமட்டமாயின. இதற்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் (7.6 மீ) தோன்றி 87,000 உயிர்களைக் கொன்றது. இருப்பினும், நில அதிர்வு அழுத்தத்தை வெளியிட இவை போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, பில்ஹாம் மற்றும் பல நில அதிர்வு நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும் இமயமலை நிலநடுக்கம் தவிர்க்க முடியாதது.

    இந்தியாவில் பூகம்பம் உருவாக என்ன காரணம்?. இமயமலைப் பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது இந்தியத் தட்டு யூரேசியத் தட்டுடன் மோதுவதால் ஏற்படுகிறது.இந்த டெக்டோனிக் மோதல்கள் பெரிய புவியியல் அழுத்தத்துடன் கூடிய பிளவுக் கோடுகளுக்கு வழிவகுக்கும். இதனால், பெரிய பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய விஞ்ஞானிகளின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில், அடுத்த பெரிய இமயமலை பூகம்பம் டேராடூனுக்கும் மேற்கு நேபாளத்திற்கும் இடையிலான பகுதியைத் தாக்கக்கூடும் என்று கணித்திருந்தது.

    பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய காலங்களில் இந்தியா மற்றும் அருகிலுள்ள நாடுகளைத் தாக்கிய பல பெரிய பூகம்பங்களை ஆய்வு செய்தனர். குஜராத் மற்றும் நேபாள நிலநடுக்கங்களின் பகுப்பாய்வில், இப்பகுதியில் குறிப்பிடத்தக்க டெக்டோனிக் உருவாக்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் கூறியிருந்தனர்.

    டெல்லி பெரிய பூகம்பத்திற்கு தயாராக உள்ளதா? தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2019 அறிக்கையின்படி, டெல்லி, இந்தியாவின் நில அதிர்வு வரைபடத்தின் IV மண்டலத்தில் வருவதாகக் காட்டியது. டெல்லி-ஹார்த்வார் முகடு இருப்பதால் டெல்லியின் நில அதிர்வு ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இந்த புவியியல் அமைப்பு, கங்கைப் படுகையின் கீழ் ஆரவல்லி மலைப் பகுதி வரை ஒத்துப்போகிறது. இதனால், டெல்லி முதல் சிம்லா வரை, முக்கிய இந்திய நகரங்கள் அதிக ஆபத்தில் உள்ளன என்று கூறப்படுகிறது.

    இமயமலை பூகம்பம் ஏன் மிகவும் ஆபத்தானது? இமயமலைப் பகுதியில் அடுத்த பெரிய பூகம்பம் நிலப்பகுதியைத் தாக்கும் என்பதால் அது மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும். நிலத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு இமயமலை பூகம்பத்தை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. ஒரு மெகா-நிலநடுக்கம் ஏற்பட்டால் நகர்ப்புற உள்கட்டமைப்பு மிகவும் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

    Readmore: ஷாக்!. ஆந்திராவில் GBS நரம்பியல் நோய்க்குறியால் 2 பேர் பலி!. 17 வழக்குகள் பதிவு!

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]