fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

  • அன்று திருமணமான நடிகருடன் ரகசிய உறவு.. ஆனா இன்று அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?

    தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா வலம் வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வரும் அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் அவர் வலம் வருகிறார். திரை வாழ்க்கையை பொறுத்த வரை நயன்தாரா ஒரு வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளன.

    முதலில் நடிகர் சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இதை தொடர்ந்து நயன்தாரா மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் காதல் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.. 2009 ஆம் ஆண்டுதான் நயன்தாரா – பிரபு தேவாவின் காதல் உறவு பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியானது.

    எனினும் இந்த கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

    எனினும் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நயன்தாராவை இரண்டு வருடங்கள் காதலித்ததாக பிரபுதேவா ஒப்புக்கொண்டார். பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

    அப்போது பேசிய அவர் “நயன்தாராவைப் பொறுத்தவரை, அவர் ரொம்ப ஸ்பெஷல். ஆம், நான் நயன்தாராவை காதலிக்கிறேன், விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். இது ஒரு தனிப்பட்ட முடிவு, அதைப் பற்றி ஊடகங்களுக்குப் பேச எனக்குப் பிடிக்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதன்பின்னர், பிரபுதேவா மோசமான காலம் தொடங்கியது. அவர் தனது மனைவி லதாவை விவாகரத்துக்காக அணுகியதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், அவரின் மனைவி லதாவோ விவாகரத்து கோரிய தனது கணவர் மீது வழக்குத் தொடர்ந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய லதா “ என் கணவரை என்னிடமிருந்து திருடிய நயன்தாராவை கைது செய்யுமாறு நான் காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்பைக் கோரியுள்ளேன். நயன்தாராவை நான் எங்கேனும் பார்த்தால், நான் அவளை அந்த இடத்திலேயே உதைத்துவிடுவேன். ஒரு மோசமான பெண்ணுக்கு சிறந்த உதாரணம் நயன்தாரா தான்.” என்று தெரிவித்தார்.

    இதனிடையே நயன்தாரா பெயரும் மோசமாக தொடங்கியது, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஒருவழியாக, 2010 இல், பிரபுதேவா – லதா தம்பதிக்கு விவாகரத்து கிடைத்தது. இது அவர்களின் 16 வருட திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

    லதாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு பிரபுதேவா நயன்தாராவுடன் மீண்டும் ஒரு நேரடி உறவில் சேர்ந்தாலும், அவர்களுக்கு இடையே விரிசல்களும் ஏற்படத் தொடங்கின.

    நயன்தாராவை திருமணம் செய்வதை பிரபுதேவா தள்ளிப்போட்டு கொண்டே வந்ததாக அப்போது ஊடகங்களில் தகவல் வெளியானது.. ஒருக்கட்டத்தில் நயன்தாரா பிரபுதேவா உடனான உறவில் இருந்து வெளியேற முடிவு செய்தார். பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]