fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

  • கருணைக்கொலை என்றால் என்ன?. மன அழுத்தத்தால் வாழ்க்கையை முடிக்க விரும்பும் இங்கிலாந்து நபர்!

     Euthanasia: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு பைபோலார் (Bipolar Disorder) எனப்படும் மனநோய் காரணமாகநெதர்லாந்து சென்று சட்டப்படி கருணை கொலை (Euthanasia) செய்ய முடிவு செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்தில் யூதானேசியா சட்டவிரோதமானது. எவரும் ஒருவர் தற்கொலை செய்ய உதவினாலும், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். ஆனால் நெதர்லாந்தில், மனநோயால் கடுமையான துன்பம் அனுபவிக்கும் நோயாளிகளும் சட்டப்படி யூதானேசியாவை தேர்வு செய்ய முடியும். இந்தநிலையில், ஜோசப் அவூவா-டார்கோ (Joseph Awuah-Darko), 28 வயதுடைய பிரிட்டிஷ்-கானா (British-Ghanaian) கலைஞரான இந்த நபர், நீண்ட காலமாக பைபோலார் நோயால் (Bipolar Disorder) துன்பமுற்று வாழ்ந்து வந்துள்ளார். நீண்டகாலமாக தாங்க முடியாத வலியைக் காரணத்தால் நெதர்லாந்தில் கருணைக்கொலை செய்ய முடிவை எடுத்துள்ளார்.

    தன் மனநலப் பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட ஜோசப் அவூவா-டார்கோ, யூதானேசியா (Euthanasia) செய்ய அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற நெதர்லாந்தில் காத்திருக்கிறேன். இந்த அனுமதி பெறும் செயல்முறை நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, கடந்த டிசம்பர் மாதம், அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ பகிர்ந்திருந்தார், அதில், “நான் பைபோலார் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், மற்றும் சட்டரீதியாக எனது வாழ்க்கையை முடிக்க நெதர்லாந்து வந்துள்ளேன் என்று தெரிவித்தார். தினமும் கடுமையான வலியுடன் எழுந்திருப்பதாகவும், ஐந்து ஆண்டுகளாக யோசித்த பிறகு, மருத்துவ உதவியுடன் மரணத்திற்காக விண்ணப்பிக்க முடிவெடுத்ததாக கூறினார்.

    கருணைக் கொலை (Euthanasia) என்றால் என்ன? யூதானேசியா என்பது தாங்க முடியாத வலி அல்லது மரணத்திற்கும் அருகிலுள்ள நோயால் (Terminal Illness) பாதிக்கப்பட்டவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்க, அவர்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதை குறிக்கிறது. பொதுவாக இறுதி நோய் அல்லது தாங்க முடியாத வலி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இந்த முடிவை எடுக்கலாம்.

    யூதானேசியாவின் வகைகள்: தன்னிச்சையான யூதானேசியா (Voluntary Euthanasia) – நோயாளி தன்னுடைய வாழ்க்கையை முடிக்க தனிப்பட்ட விருப்பத்துடன் அனுமதி வழங்குவது.

    தன்னிச்சையற்ற யூதானேசியா (Non-Voluntary Euthanasia) – நோயாளி முடிவெடுக்க முடியாத நிலையிலிருந்தால் (உதாரணம்: கோமா நிலை), மருத்துவரின் முடிவில் செயல்படுத்தப்படும் யூதானேசியா.

    நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது, அங்கு அது நெறிமுறை ரீதியாகவும் நோயாளியின் வெளிப்படையான வேண்டுகோளுடனும் செய்யப்படுவதை உறுதிசெய்ய கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக உள்ளது, கடுமையான விதிமுறைகளின் கீழ் இந்த நடைமுறையை அனுமதித்த முதல் நாடு இதுவாகும்.

    டச்சு அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த நடைமுறையில் நோயாளியின் வெளிப்படையான வேண்டுகோளின் பேரில் ஒரு மருத்துவர் ஒரு அபாயகரமான மருந்தை வழங்குகிறார். மேலும், குறைந்தது இரண்டு மருத்துவர்களின் அனுமதி பெறப்பட வேண்டும். இந்த நடைமுறை மருத்துவ ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மனநல பிரச்சினைகள் உட்பட பல்வேறு நோய்களுக்காக இதை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

    பைபோலார் கோளாறு என்பது அதிகமான மனநிலைக் குவியல்கள் (Manic Highs) மற்றும் தீவிரமான மனச்சோர்வுகள் (Depressive Lows) ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படும் ஒரு மனநலக்கோளாறு ஆகும். இது அன்றாட வாழ்க்கையை கடுமையாக சீர்குலைத்து, வேலை, உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கும். அவூவா-டார்கோ தனது வாழ்க்கையின் மதிப்பைக் புரிந்துகொள்வதுடன், மனநலச் சுமையால் தாங்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாக வலியுறுத்துகிறார். “வாழ்க்கை இயல்பாக மதிப்புமிக்கது என்பதை நான் நம்புகிறேன். ஆனால், இந்த மனச்சுமையை மேலும் சகிக்க முடியவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய வார்த்தைகள் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை பிரதிபலிக்கின்றன.

    யூதானேசியா விண்ணப்பத்திற்கு கூடுதலாக, அவூவா-டார்கோ “The Last Supper Project” என்ற முயற்சியை தொடங்கியுள்ளார். இது உலகளாவிய அளவில் உணவு விருந்துகளை (Dinner Tour) நடத்தும் ஒரு திட்டமாகும், இதில் அவர் அந்நியர்களுடன் (Strangers) உட்கார்ந்து உணவுப் பகிர்ந்து, தனது மனநலப் பயணத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும், அவர் “Dear Artists” என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார், இது 2025 வசந்தகாலத்தில் (Spring 2025) வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்திலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாயும் ஒரு மனநல அறக்கட்டளைக்கு (Mental Health Charity) வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    Readmore: தல தரிசனத்திற்கு ரெடியா?. சேப்பாக்கத்தில் அலப்பறை ஆரம்பம்!. இன்று சென்னை – மும்பை மோதல்!.

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]