பிரதம மந்திரியின் விவசாய நிதியுதவி பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு […]

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே திமுக தலைமை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 […]

தமிழ்நாட்டில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டதை எதிற்கும் விதமாக, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள […]

வங்க கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரையில் பரவலாக மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய ஒடிசா கடற்ப பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற […]

மயிலாடுதுறை மாவட்டம் அருகே இருக்கின்ற ஒரு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து வெளி ஒரு சிறுமி படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இருக்கின்ற கபூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் காசி இதனுடைய மகள் கீர்த்தனா 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதோடு அந்த கிராமத்தில் கடந்த சில வருடங்களாக மீன் கம்பி தாழ்வாக தூங்கிக் […]

Agricultural scientist Recruitment board 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களை வரவேற்று உள்ளது வேளாண்மை துறையில் பணிபுரிய ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதி: Degree, Ph.D வயதுவரம்பு 28-40 விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி: ஜூன் 26 2023 இது பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.asrb.org.in என்ற இணையதள முகவரியை […]

தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த வட மாநில தொழிலாளியின் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேபாளத்தை சேர்ந்தவர் கோபி சிங். இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கின்ற உடையார் குளத்தை சேர்ந்த பிரவீன் என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தகைய நிலையில்தான் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் நீராடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத மகள் ஆயிஷா […]

ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருக்கும் பட்டியலில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்‌ நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்‌ உட்பட 13 மசோதாக்கள்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவியின்‌ ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்‌கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில்‌ உள்ளன. அதேபோல பன்வாரிலால்‌ புரோகித்‌ ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில்‌ அனுப்பிய 2 […]

எந்த விதமான தேர்வும் எழுதாமல் பிட்டர், வெல்டர், பிளம்பர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுணர்களை பணியமர்த்துவது குறித்து ஆள்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. இதற்கான காலி பணியிடங்கள்: 772 தேர்வு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ள நபர்களுக்கு 6-6- 2023 அன்று […]