fbpx

தருமபுரி மாவட்டத்தில்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காகவும்‌, மாறி வரும்‌ சூழலுக்கு ஏற்பவும்‌, நவீனசலவையகங்கள்‌ அமைத்திட மேற்கண்ட இன மக்களில்‌ சலவைதொழில்‌ தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அமைத்து ரூபாய்‌ 3 இலட்சம்‌ நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதிகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ பின்வருமாறு 1.குழு உறுப்பினாகளின்‌ குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்‌ (விண்ணப்பிக்கும்‌ நாளில்‌) 2. குறு, சிறு […]

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் கிச்சன், ஸ்மார்ட் வாட்ச் என மாறி வரும் நவீன காலக்கட்டத்தில் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.. கிராமப்புறங்களில் ஒரு சில வீடுகளை தவிர, கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டரையே பயன்படுத்துகின்றனர்.. ஆனால் கேஸ் சிலிண்டரின் நிறம் ஏன் சிவப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? கேஸ் சிலிண்டரின் சிவப்பு நிறத்திற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இதன் பின்னணியில் […]

சென்னையில் அகரம் பவுண்டேசன் தொடங்கி 43 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடிகர் கார்த்தி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறுவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்பட்டிருப்பது பற்றி பேசினார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசனின் 43வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் , சான்றிதழும்  வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் , ’’எங்களுக்கு எங்கள் தந்தை நல்ல சிந்தனையை ஊட்டி வளர்த்துள்ளார். அது மகிழ்ச்சியை […]

நமது உடலில் இரத்தம் இல்லாததால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் இரண்டு வகையான இரத்த அணுக்கள் உள்ளன. ஒரு இரத்த சிவப்பணு மற்றொன்று வெள்ளை இரத்த அணு. உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், அது இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் தீவிரமானது. இதற்குப் பின்னால் சமநிலையற்ற உணவு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இரத்த சோகையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுகளை உணவில் […]

பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். சமூக சேவையில் முன்னோடியாக இருந்ததோடு, அரசியல் தலைவராகவும் அவர் தடம் பதித்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட  பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே 15 மனைவிகளை திருமணம் செய்து அவர்களை ஒரே வீட்டில் ஒற்றுமையாக 107 குழந்தைகளுடன் […]

தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு […]

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, […]

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கட்டண உயர்வு எவ்வளவு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு குழப்பமாகவே உள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர் தமிழகத்தில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் […]

No Entryயில் வாகனத்தை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே கடந்த 8-ம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக No Entryயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. அந்த ஆட்டோவை போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் மடக்கிப் பிடித்தார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதைப் பார்த்த அவர், அபராதம் ஏதும் விதிக்காமல் ஆட்டோவை […]