fbpx

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு உரிய விசாரணை கேட்டு அனுமதியின்றி அமைதி பேரணிக்கு முகநூலில் அழைப்பு விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் நகராட்சி துறை மங்கலத்தில் 8-வது வார்டு செயலாளர் சூர்யா. 9-வது வார்டு செயலாளர் தீபக், மற்றும் கம்பம் தெருவில் வசிக்கும் சுபாஷ் ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதி பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்து முகநூலில் பதவிட்டதாக தெரிகிறது. […]

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், வன்முறை சம்பவத்திற்கு தி.மு.க அரசு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது.  அ.தி.மு.க கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதவது:- கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை […]

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூலை 18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கோவை, […]

அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலையின் மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். அப்போது அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு விறுவென ஏறிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை […]

பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் நிகழ்வாகும். பூப்படைந்த நாட்களில் இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் நிலைக்கு தகுந்தவாறு மாற்றங்கள் இருக்கும். மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகள் உண்டாகும். அந்த சமயங்களில் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். மாதவிடாய் நாட்கள் என்பது பல பெண்களுக்கு மிகவும் நெருக்கடியான […]

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி முகாம் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக்காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கல்வித்தகுதி – […]

கோவையில் போதை ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறையினர், வெளியிட்ட செய்தியில் கோவை மாவட்டம் மதுரக்கரை அருகே உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் (20) என்பவர், பி.இ இரண்டாம் வருடம் படித்து வந்தார். எனவே, அவரும் அவரது நண்பர்களும் […]

இலங்கயில் மீண்டும் அவசர நிலையை அறிவித்து தற்காலிக அதிபர் ரணில் விக்ரம சிங்க உத்தரவிட்டுள்ளார்.. இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் […]

மாணவி உடலை மறு பிரதேச பரிசோதனை செய்யும் குழுவில் தங்கம் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், […]

சேலம் அருகே உள்ள பள்ளி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவி ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மனைவியின் தந்தை இறந்துவிட்டதால், அவரது பெரியப்பா அவரை தினமும் பள்ளிக்குச் சென்று விட்டு வருவது வழக்கம் அதன்படி இன்று […]