fbpx

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(33). இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). சில காலமாக கார்த்திகேயன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று கார்த்திகேயன் கண் விழித்து பார்த்தபோது காயத்ரியை […]

விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து […]

வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு […]

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை சன்மானமாக வழங்குவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறுகின்றனர். அந்த வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை யாராவது கொண்டு […]

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக […]

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் ராஜ் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியின் தாய், தந்தை வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்தனர். சிறுமியின் ஆயாவும் கடைக்கு சென்றிருந்தார். இதனால் சிறுமி மற்றும் அவருடைய தம்பி, தங்கைகள், […]

’தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் […]

இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை […]

தன்னுடைய மாமனார் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை புகார் அளித்துள்ளார்.  சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனா நாச்சியார் (என்ற) ரஞ்சனா (37). இவர், தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மாமனார் சரவணவேல் […]

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்கசந்திரா பகுதியில் பவர்லால் என்பவர் நகைக்கடை மற்றும் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்து கடையில் வேலை செய்யும் தர்மேந்திரா என்பவர் கடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு நகை வாங்குவது போல இரண்டு பேர் வந்து நகைகளை பார்த்து கொண்டு இருந்தனர். சிறிது […]