2024 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை வகிக்க தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை […]
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் அப்டேட் செய்ய வேண்டும். மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், FASTag இல்லாமல், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்திய தேசிய நெடுஞ்சாலை […]
ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார்.. ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் கடந்த 4-ம் தேதி இணைந்தார். அக்கட்சியின் அகில இந்திய தலைவர் […]
வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்தது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 05.06.2023 அன்று வெளியிடப்பட்டது . விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேர் . அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு ” […]
தினமும் காலையில் நாம் அந்நாளை துவங்கும் முன் கடவுளை வணங்கி விட்டு தான் நாம் துவங்குவோம். அப்படி இருக்க நம் அனைவருடைய வீட்டிலும் பூஜையறை இருக்கும். அந்த பூஜையறையில் இருக்க கூடாத சாமி படங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம். விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கலாம். ஆனால் சனீஸ்வர பகவானின் படங்கள் ஒருபோதும் வீட்டில் இருக்கக் கூடாது. அதேபோல் மொட்டை அல்லது கோவனம் கட்டிய படி உள்ள […]
மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவில் திறப்பிற்கான சிறப்பு பூஜைகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என உத்திர பிரதேச […]
தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர். இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட பழக்கவழக்கங்களில் ஒரு சிலவற்றை மாற்றிக்கொள்வதுமே தீர்வாக அமையும். இதன்படி வெற்றிலை உடல் எடையை குறைப்பதற்கு […]
பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் முதலாவது தொகுப்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். கடைக்கோடியில் உள்ள கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் அந்தியோதயாவின் தொலைநோக்குப் பார்வையுடனான பிரதமரின் முயற்சிகளுக்கு இணங்க, குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடிக் குழுக்களின் (பி.வி.டி.ஜி) சமூக-பொருளாதார நலனுக்காக 2023, நவம்பர் 15 அன்று பழங்குடிமக்கள் கெளரவ தினத்தை முன்னிட்டுப் பிரதமர்-ஜன்மன் திட்டம் […]
பொதுவாக எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு சமாளித்து விடலாம். ஆனால் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான மன குழப்பம், மன பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கடினம். இதனால் தான் மனதை எப்போதும் குழப்பம் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும். மன குழப்பத்தினால் நாம் எடுக்கும் முடிவு வாழ்வில் மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். இவ்வாறு மன குழப்பத்தில் இருக்கும் போது ஒரு சிலர் கோயிலுக்கு […]
பொதுவாக செல்வத்திற்கு எல்லாம் அதிபதி, செல்வங்களை பாதுகாப்பவர் குபேரர் தான். குபேர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்று பலரும் இவரை வேண்டி வருகின்றனர். அவ்வாறு குபேர பகவானின் அருள் கிடைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பணமழை கொட்டும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜோதிடத்தை பொறுத்தவரை 12 ராசிக்காரர்களுக்கும் சூரியன், சந்திரன், குபேரன், சனிபகவான் போன்றவர்களில் ஒருவர் அதிபதியாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அதிபதியாக இருப்பவர் […]