வங்கதேசத்தின் டாக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கட்டிடங்களை சேதப்படுத்தியது, பல இடங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்தியது மற்றும் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவில் நான்கு பேரும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியான நர்சிங்டியில் ஐந்து பேரும், புறநகர் நதி துறைமுக நகரமான நாராயண்கஞ்சில் ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காசிபூரின் புறநகரில் உள்ள தொழில்துறை நகரத்தில் மட்டும், […]

தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை நேற்று முதல் அமலுக்கு […]

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் பாபிரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்க உறைவிடப் பள்ளியை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கி அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 ஆசிரியர்களை கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள அக்வாரா பகுதியில் செயின்ட் மேரீஸ் என்ற தங்கும் வசதியுடன் கூடிய கத்தோலிக்க பள்ளி செயல்படுகிறது. யெல்வா மற்றும் மோக்வா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை […]

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் […]

மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ‌ ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]

துபாயில் விபத்துக்குள்ளான தேஜாஸ் ஜெட் விமானத்தின் விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் கடைசி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நம்னாஷ் சியால் உயிரிழந்தார். துபாயின் அல் மக்தூம் விமான நிலையத்தில் ஒரு டெமோ விமானத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க இந்திய விமானப்படை விசாரணை நீதிமன்றத்திற்கு […]

தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]