உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சலி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸும் கிடைத்திருந்தனர். ஆரம்பத்தில் கணவர் ராகுலுடன் அவர் ரீல்ஸ் செய்தபோது, சில ஃபாலோவர்ஸ் ராகுலின் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களைப் […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை தொகுப்பு மற்றும்‌ புல்கறணைகள்‌ பெறும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியில், மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, அதை ‘தீய சக்திகளின் தாக்கம்’ என்று நம்பிய கணவரும் மாமனாரும், மந்திரவாதியுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாந்திரீக பூஜை என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவச்சியூரை சேர்ந்த அகில் (26) என்பவர் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் அகிலின் மனைவிக்கு […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதுடன், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்வதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 39 வயது வடமாநிலப் பெண் ஒருவருக்கு கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வந்த ரமேஷ்குமார் (34) என்ற ஓட்டுநருக்கும், அந்தப் பெண்ணுக்கும் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த ரமேஷ்குமாரின் மனைவி, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, […]

வந்தே மாதரம் பாட தமிழக அரசாங்கம் மறுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 2025-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்”, 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதர்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை […]