இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு கசிவுகளை தடுக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான மாற்றத்தை வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்போது, இனிமேல் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் அச்சிடப்படாது என்று UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் ஆன்லைன் […]

நம் நாட்டில், 30 முதல் 40 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 60 லட்சம் முதல் 120 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு மட்டுமே கல்லீரல் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்கிறார்கள். மது அருந்தாதவர்களுக்கு இந்த நோய் வராது என்ற தவறான கருத்து இருந்தது. இருப்பினும், அத்தகைய சிந்தனை ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். […]

பிரதமர் நரேந்திர மோடி குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இவை வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள் என்று அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொறுப்பையும் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் 18 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவிப்பதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று […]

உத்தரப்பிரதேச மாநிலம் பரசுராம்பூர் பகுதியில் திருமணம் முடிந்து வெறும் 7 நாட்களே ஆன நிலையில், புதுமணப் பெண் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரசுராம்பூரைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் அனீஸ் (25) என்பவருக்கும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ருக்ஷனா (20) என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து ஒரு வாரமே […]

சென்னையில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,438 கோடி அளவுக்கு ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு ஏற்கனவே சோதனை மேற்கொண்டது.. இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.கே சுரேஷ் உள்ளிட்டோரிடம் […]

கேரள மாநிலம் கொல்லம் கரிக்கோடு பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவி மீது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (54) மற்றும் அவரது மனைவி கவிதா (46) ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த முந்தைய […]

இந்தியப் பெண் ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இங்கிலாந்தில் வசிக்கும் பென் வங்க்ஜோம் தொங்க்டொக் என்ற இந்திய பெண், நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தம் இருந்தது. ஆனால், தனது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சல் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், சீன குடிவரவு பணியாளர்கள் […]