காலை உணவின்போது முட்டையைத் தவிர்க்க முடியாதவர்கள் பலர். புரதச்சத்து நிறைந்த இந்த ‘சூப்பர்ஃபுட்’, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமானது. இருப்பினும், ‘முட்டைகள், குறிப்பாக அதன் மஞ்சள் கரு, கொழுப்பை அதிகரித்து இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்’ என்ற பொதுவான கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் பலர் முட்டையைத் தவிர்ப்பது அல்லது மஞ்சள் கருவை மட்டும் ஒதுக்குவது உண்டு. உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வியாபாரி சுரேந்திரன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொச்சி அருகே உள்ள குன்னத்துநாடு, வெங்கோலா பகுதியில் வசித்து வந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக வீட்டில் சுமார் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேந்திரன் திடீரென மாயமானார். அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், […]

தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது. தற்போது, ​​தங்கம் 10 கிராம் ரூ.1,30,000 அளவில் வர்த்தகமாகிறது. இதுபோன்ற போதிலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை. தந்தேராஸ் பண்டிகையின் போது ரூ.60,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை இதற்கு சான்றாகும். தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து லாபத்தை ஈட்டி வருகின்றன. அக்டோபர் 2020 இல், அதன் விலை 10 கிராமுக்கு […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]

தமிழ்நாடு அரசு, சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 3 முக்கியத் திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சுயதொழில் தொடங்குவதற்கான மானியம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறும் வசதி ஆகியவை அடங்கும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாக, நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் மானியம் வழங்குகிறது. […]

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், நவம்பர் 1 முதல் 155% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனாவிற்கு கடுமையான பொருளாதார எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் […]

ஏராளமான இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் இந்திய குடிமக்கள் கனடாவில் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையரான தினேஷ் கே. பட்நாயக் கவலை தெரிவித்துள்ளார். “இங்கு பாதுகாப்பு தேவை என்று நானே உணருவது விந்தையாக இருக்கிறது” என்று கூறிய அவர், சில கனடியர்கள் இதுபோன்ற பிரச்சினையை உருவாக்குகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கனடா இதை ஒரு இந்தியப் பிரச்சினையாக […]

நாடு முழுவதும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இந்த ஒளியின் திருநாளைக் கொண்டாடினர். இருப்பினும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாகச் […]