பொதுவாக, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநல பிரச்சனைகள் வரை பல உடல்நலக் கோளாறுகளுடன் குடல் நேரடியாகத் தொடர்புடையது. இதுகுறித்து எய்ம்ஸ், ஹார்வர்டு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் அமைப்பைச் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். கழிப்பறைப் பழக்கமும், மூலநோயும் : கழிப்பறையில் […]
திருப்பதி திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏழுமலையானை மனதார வழிபடும் இந்த பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலமாக தினமும் சுமார் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2, ரம்பாகிச்சா பேருந்து நிலையம், […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். […]
தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் […]
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 21வது தவணை தீபாவளிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மில்லியன் கணக்கான விவசாயிகள் பிரதமர் கிசான் யோஜனாவின் 21வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அறிக்கைகளின்படி, தீபாவளிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ2,000 தவணை மாற்றப்படலாம். இருப்பினும், இந்த முறை அரசாங்கம் முதலில் சில விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றலாம். 21வது தவணை குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளைப் பற்றி […]
அக்டோபர் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. ரயில் பயணம், மொபைல் பணம் செலுத்துதல், ஓய்வூதிய முதலீடுகள் அல்லது ஆன்லைன் கேமிங் என எதுவாக இருந்தாலும், இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கலாம். NPS-ல் பெரிய மாற்றம்: தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஒரு பெரிய சீர்திருத்தத்திற்கு உட்பட உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை பல திட்ட கட்டமைப்பு […]
கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கான உற்பத்தியுடன் கூடிய பணப்பலன் அறிவித்துள்ளது மத்திய அரசு. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இல்லாத பிற பணியாளர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய பணப்பலனாக 1,03,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலக்கரி தொழில்துறைக்கான நிலைக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கோல் இந்தியா நிறுவனத்தில் […]
ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை தரக் கூடியது புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டசசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும். தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார […]
பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]
ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட […]

