நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்துகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்.. பிரதமரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும் “ ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு […]

இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் இந்திய கடற்படை கவனமாக கண்காணித்து வருவதாகவும், அதில் சீனக் கப்பல்களும் உள்ளதாகவும், எந்தவித சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று தெரிவித்துள்ளார். இது, பீஜிங் சார்பில் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் ராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறியாகும்.. தொடர்ந்து பேசிய அவர் “தற்போது இந்திய கடற்படையில் சுமார் 40 கப்பல்கள் இந்தியப் […]

பலருக்கும் ரயில் பயணம் என்றால் ஒரு சுவாரஸ்யமான அனுபவம். சிலர் ரயில் ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து பாலைவனக் காட்சியை ரசிப்பார்கள்; சிலர் மலைகளுக்குள் சுழலும் பாதையில் சக்கரங்களின் சத்தத்தை கேட்டு மகிழ்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க தங்கம் பூசிய ஒரு ரயில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?ஆம்! சவுதி அரேபியா விரைவில் “Dream of the Desert” என்ற பெயரில் உலகின் மிகவும் ஆடம்பரமான ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது.. இதன் […]

வயதான பின்னர் ஏற்படும் மறதி (டிமென்ஷியா) குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (KGMU) மற்றும் லக்னோப் பல்கலைக்கழகத்தின் PGI இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அதில் ஆண்களை விட 3 மடங்கு பெண்கள் அதிகம் நினைவிழப்புக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. இந்த ஆய்வில் 350 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். ஆண்களில் 100 பேரில் 13 பேருக்கு நினைவிழப்பு ஏற்பட்டால், அதே வயது […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இன்று தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா? […]