ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் நகரில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒட்டுமொத்த ஊரே விற்பனைக்கு வந்துள்ள அதிர்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சாம்பார் நகரம், உப்பு உற்பத்தி மற்றும் பறவைகள் வரும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, தற்போது மக்கள் நகரம் விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. சமீபத்தில், சாம்பார் நகரில் உள்ள வார்டு 22 […]
உத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த தம்பதி, அலம்பாக் காவல்நிலையத்தில் தனது 3 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விசாரணையின் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த […]
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட HKU5-CoV-2 எனப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.. சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. புதிய மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிபுணர்கள் […]
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டு வருகிற நிலையில், சில சமூக வலைதளங்களில் “சன் ஸ்கிரீன் போட்டால் புற்றுநோய் வரலாம்” என்கிற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகொடுத்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல். தற்போதைய சூரிய கதிர்வீச்சு மற்றும் கேஜட் மூலம் வரும் வெளிச்சங்களை மையமாகக் கொண்டு, சருமம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம் என டாக்டர் கூறுகிறார். […]
செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]
இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள். எந்தவொரு நிறுவனத்திலும் on-roll job வேலை இல்லாதவர்கள், சில சமயங்களில் அந்த வேலையில் இருந்தாலும், தங்கள் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் வேலையைத் தேடுவது மிகவும் பொதுவானது. இந்த வேலை பகுதி நேர வேலை என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் சிலர் அலுவலகம் சென்று முழுநேர வேலை செய்ய முடிவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஃப்ரீலான்ஸராக(freelancer) வீட்டிலிருந்து வேலை […]
மறைந்த நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் கொடுத்துள்ளார். மறைந்த நடிகர் ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு தான் போவாரம். சம்பவத்தன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜேஷுக்கு மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்துள்ளர். பின்னர், நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷின் மகனிடம் கூறியிருக்கிறார். […]
2025 நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தேர்வை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. 2025-ம் ஆண்டுகான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் அன்றைய தினம் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை […]
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ. வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் […]
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் உள்ள விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விஞ்ஞானி – பி (Scientist ‘B’) 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) 12 என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி […]