செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது போலியோ நோயைத் தடுப்பதற்கான ஒரு தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் இந்த தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் […]

தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் ராமாயணத்தில், ராவணனின் மகள் சுவர்ணமாச்சா, அனுமனை நேசித்து, ராமர் சேதுவைக் கட்ட உதவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க மீனை அங்கு வழிபடுகிறார்கள். ராமாயண காலத்திலிருந்து அரிதாகவே குறிப்பிடப்படும் பல கதைகளை நாம் காண்கிறோம். ஸ்ரீ ராமர், அனுமன் மற்றும் ராவணனைக் கொன்றது தொடர்பான பல கதைகள் இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் சொல்லப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்தைத் தவிர, பல நாடுகளில் பல்வேறு ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. வெளிநாட்டு ராமாயணங்களும் […]

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]

மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை அலங்கரிக்க யானை சிலைகளை வைத்திருப்பார்கள். சிலர் அதை நேர்மறை மற்றும் வலிமையின் அடையாளமாகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் அதை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதுகிறார்கள். இருப்பினும், வாஸ்து படி, எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் வைப்பது பொருத்தமானதல்ல. சில நேரங்களில், நாம் சிந்திக்காமல் நம் வீடுகளில் வைக்கும் பொருட்கள் நமது பிரச்சினைகளுக்கு வேராகின்றன. யானை ஞானம், வலிமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், தவறான திசையில் […]

பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]

வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு […]

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

இப்போதெல்லாம், குழந்தையின் உணவைத் தீர்மானிப்பது பெற்றோருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. என்ன உணவளிக்க வேண்டும், என்ன உணவளிக்கக்கூடாது என்பது குறித்து பெற்றோர்கள் அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இருப்பினும், உணவில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே, ஒவ்வொரு குழந்தையின் தட்டிலும் இருக்க வேண்டிய ஒரு சூப்பர்ஃபுட் பற்றி நாம் பேசினால், அது முட்டைகள். முட்டைகள் மலிவானவை, ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் […]

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]

அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு பெரிய சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர் ஈஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த புயல், அடுத்த வார தொடக்கத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் ஆபத்தான அலைகள், பலத்த மழை மற்றும் வெப்பமண்டல சூறாவளியைப் போல பலத்த காற்றையும் கொண்டு வரும். புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரமடையும் போது, ​​அதன் […]