மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தலில் ஒரு வாக்கில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான். ஆனால் அதிமுக தலைமையோ பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்காமல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் நீக்கி வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நிர்வாகிகள் […]

நாம் செய்யும் சில தவறுகளால் நம் முன்னோர்களின் ஆத்மாக்களின் ஆசி கிடைக்காமல் போவதையே பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம். இந்த தோஷம் இருந்தால், வாழ்வில் பலவிதமான துன்பங்கள், தடைகள், பணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்ற சூழல் உருவாகும். பித்ரு தோஷம் உள்ளதா என அறிவது எப்படி..? உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லை என்றால் பித்ரு தோஷமும், சந்திரன் சரியில்லை என்றால் […]

பன்னாட்டு சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த பதிவில், புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய மேலாளரின் கீழ், இந்திய ஊழியர்களுக்கு எதிராக கலாச்சார அக்கறையின்மை, பாகுபாடு மற்றும் நச்சுத்தன்மை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததாகக் கூறும் பெயரில்லா ரெடிட் பயனர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட (acquisition) செயல்முறைக்குப் பிறகே இந்த பிரச்சினைகள் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவைத் […]

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரித்து அந்த தொழிலை மேம்படுத்த தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்: முந்திரி உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று 2025-26-ம்ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக மாநில […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர […]

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்: கடந்த 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினராக எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான். அதை ஏற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய திட்டம்தான் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகளை திமுக ஆட்சியில் இயக்கி […]

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் மக்களிடையே விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. அவரது கணிப்புகள் ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்லாமல், பல முறை துல்லியமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படும் பாபா வாங்கா, தனது வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்த ஒரு மர்மமான ஆளுமை. 9/11 தாக்குதல்கள், சுனாமி மற்றும் உலகளாவிய தொற்றுநோய் போன்ற நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகக் கூறி அவர் பிரபலமானார். தற்போது, ​​2025 ஆம் […]

அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் &, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த […]