நாமக்கல் சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு […]
ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]
பெருமாள் மாதமாக கொண்டாடப்படும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 20 இன்று வருகிறது. 2025 புரட்டாசி முதல் சனிக்கிழமை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். புரட்டாசி மாதம் என்றாலே, புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, படையல், என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் களைகட்டும். இன்று, செப்டம்பர் 20, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில், முதல் சனி, இரட்டிப்புப் பலன்களைத் தரும். இந்த நாளில் என்ன செய்யலாம் என்று […]
தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட […]
மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், மாதாந்தோறும் அமாவாசை திதி கொடுத்தாலும் இந்த மகாளய அமாவாசை திதி கொடுப்பது காசி, ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது போன்று ஆகும்.அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். அதாவது திதி கொடுக்கப்படாத முன்னோர்களுக்கு வழக்கமாக காசி ராமேஸ்வரத்தில் சென்று தான் திதி கொடுப்பார்கள் . ஆனால் அதனை இந்த மகாளய அமாவாசையில் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாளய அமாவாசையில் நூறு கோதானங்கள் […]
உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]
சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் […]
சூரிய கிரகணம் முக்கிய வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சந்திரன் வரும் ஒரு வானியல் நிகழ்வாகும்.வானியல் நிகழ்வு ஒரு காட்சி மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார, அறிவியல் மற்றும் வானியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (செப்.21) அன்று […]
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், […]
ஆசிய கோப்பை 2025 இன் 12வது போட்டியில் ஓமனை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. குரூப் கட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில், இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அர்ஷ்தீப் சிங் T20I இல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் ஆனார். ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி […]

