தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து […]

இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 24வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இந்தப் போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. இப்போது, ​​1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. வாரியத்தின் […]

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் […]

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது […]

இப்போதெல்லாம், எல்லோரும் புத்திசாலித்தனமாகத் தோன்ற விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல்வேறு முறைகளை முயற்சி செய்கிறார்கள். சிலர் தங்கள் ஆடைகளில் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்த தங்கள் தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக, சந்தையில் பல பிராண்டுகள் கிடைக்கின்றன, அவை விலையில் வேறுபடுகின்றன. இது தவிர, அவை வெவ்வேறு வண்ணங்களில் முடிக்கு வண்ணம் தீட்டுகின்றன. ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த ரசாயன வண்ணங்களால் உங்கள் தலைமுடிக்கு […]

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலிகள் மீதான ஆய்வக சோதனைகளில் புற்றுநோயை முற்றிலுமாகத் தடுக்கும் ஒரு “சூப்பர் தடுப்பூசி”யை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துகிறது, இது அசாதாரண செல்களை அடையாளம் கண்டு அழிக்க உதவுகிறது, புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. சோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட எலிகள் பல மாதங்கள் ஆரோக்கியமாக இருந்தன, அதே நேரத்தில் தடுப்பூசி இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இந்த […]

திருமாவளவன் முதலில் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். காவல் துறையில் பணியாற்றி பல ரவுடிகளை கையாண்ட பின் அரசியலுக்கு நான் வந்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கரூரில் செப்.27-ம் தேதி நடந்த அரசியல் கட்சி நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல் அரசின் மீது தவறு இல்லை. காவல் துறை […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. […]