ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலிக்கு 37 வயது. தற்போது, ​​அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இருப்பினும், அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். அவரது பிறந்தநாளில், அவரது ஐந்து வரலாற்று இன்னிங்ஸ்களைப் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்று 37 வயது ஆகிறது. வயது முதிர்ந்த போதிலும், அவர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் தொடர்கிறார். விராட் […]

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மொத்த வாக்குகளில் 75 சதவீதம் எண்ணப்பட்ட நிலையில், மம்தானி 50.4% வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது எதிரணி ஆண்ட்ரூ குவோமோ (Andrew Cuomo) 41.3% வாக்குகள் பெற்றுள்ளார்.. அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் ஜோஹ்ரான் மம்தானியை அமெரிக்க கிழக்கு நேரப்படி இரவு 9:34 மணிக்கு வெற்றியாளராக அறிவித்தது. […]

இந்த நவம்பர் மாதம் பல புதிய திரைப்படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோட வைக்கும் வகையில், சில சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மீண்டும் வெளியீட்டு (Re-Release) பட்டியலும் நீண்டுள்ளது. திரையரங்கில் இத்திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கிய காலத்தால் அழியாத திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் வெளியாகிறது. 1987 […]

பிலிப்பைன்ஸில் கோர தாண்டமாடிய சூறாவளி மற்றும் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்காங்கே ஆண்டுதோறும் பூங்கம்பம், சூறாவளி, கனமழை, வெள்ளப்பெருக்கு என இயற்கை பேரிடர்கள் பேரழிவை ஏற்படுத்துவிட்டு செல்கின்றன. அந்தவகையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், […]

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய கல்மேகி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 6 பேரும் பலியான சோகமும் இதில் அடங்கும். புயலின் மையமாக விளங்கிய மத்திய பிராந்தியத்தில், குறிப்பாக செபு தீவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]

இன்றைய தினம் (நவம்பர் 5) ஐப்பசி மாதப் பௌர்ணமி என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலேயே மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் இந்த அன்னாபிஷேகம், ஐப்பசி பௌர்ணமியில் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் பிரகாசிக்கும் வேளையில் சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தி வழிபடப்படுகிறது. இது மனக்கவலைகளை நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அன்னாபிஷேக திருநாளில் […]