இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: […]

இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-இல், போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை தோற்கடித்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, தங்கப் பதக்கம் வென்று வரலாற்றை படைத்துள்ளார். இங்கிலாந்து லிவர்பூலில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 நடைபெற்று வருகிறது. பெண்கள் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக […]

கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் […]

இப்போதெல்லாம், அலுவலக வேலைகளைச் செய்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதுதான். திரையில் தொடர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு விறைப்பு, கண் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுவது பொதுவானது. 8-9 மணிநேர வேலை நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்பினால், நாற்காலி யோகா உங்களுக்கு சிறந்த வழி. நாற்காலி யோகாவில், நீங்கள் தரையில் உட்காரவோ அல்லது அதிக இடம் இருக்கவோ தேவையில்லை, உங்களுக்கு […]

வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியமானவை. வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. ஒருவர் தொழிலில் முன்னேற விரும்பினால், அவர் தனது அலுவலகத்தில் இந்த வாஸ்து குறிப்புகளின் உதவியைப் பெறலாம். உங்கள் தொழிலை வெற்றிகரமாக்க விரும்பினால், நிச்சயமாக இந்த வாஸ்து பரிகாரங்களை முயற்சிக்கவும், இதனால் லட்சுமி தேவியே உங்கள் தொழிலில் தனது ஆசீர்வாதங்களைப் பொழிவார், மேலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பால் சூழப்படுவீர்கள். பெரும்பாலான […]

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நில அளவை துறை உதவி வரைவாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்புவனம் […]

வன்முறைக்கு மத்தியில் நேபாளத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார். இந்தியாவின், அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, […]

நம்மில் பெரும்பாலோர் குளியலறையை சேமிப்பு இடமாகப் பயன்படுத்துகிறோம். துண்டுகள், மருந்துகள், ஒப்பனை, பேட்டரிகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை குளியலறையில் வைத்திருப்போம். இது வசதியாகத் தெரிகிறது, ஆனால் குளியலறையின் ஈரப்பதமான மற்றும் நீராவி சூழல் இந்தப் பொருட்களுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து மாறிவரும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை பொருட்களைக் கெடுப்பது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். குளியலறையில் துண்டுகளை வைத்திருப்பது […]

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது. ஒரு கணம் கூட வேலை செய்வதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிடுவார். சுமார் 300 கிராம் எடையுள்ள இந்த உறுப்பு, தொடர்ந்து இரத்தத்தை பம்ப் செய்து கொண்டே இருக்கும். ஆக்ஸிஜன் இல்லாத இரத்தம் முதலில் இதயத்தின் வலது பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து நுரையீரலை அடைந்து ஆக்ஸிஜனால் நிரப்பப்பட்டு, பின்னர் இடது பக்கம் வழியாக முழு உடலின் உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த செயல்முறை […]

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய […]