கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 481 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாநில ஆள்சேர்ப்பு நிலையம் சென்னை (ம) கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தருமபுரி அவர்களால் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 481 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு. தேர்வு […]

இங்கிலாந்தில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தின் ஓல்ட்பரி நகரில் உள்ள டேம் சாலை அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று காலை […]

இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்துள்ளார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: […]

இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-இல், போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை தோற்கடித்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, தங்கப் பதக்கம் வென்று வரலாற்றை படைத்துள்ளார். இங்கிலாந்து லிவர்பூலில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 நடைபெற்று வருகிறது. பெண்கள் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக […]

கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் […]