தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ கடன் பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என […]

மனித வாழ்வில் எதிர்பாராதவிதமாக தோல்விகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனஅமைதி கெடுக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். இது பல நேரங்களில் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாக இருக்கலாம். இந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்போது, அவற்றின் இடத்தை நேர்மறை ஆற்றல்கள் கைப்பற்றும். நேர்மறையான அதிர்வலைகள் அதிகரிக்கும்போது, நாம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கும். பண வரவுக்கு தடைகள் குறையும், கடன் சுமைகள் குறையும். விரதம் : ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் உதய […]

ஜெய் ஹிந்த் என்றால் இந்தியாவின் வெற்றி என்று பொருள். சுதந்திரப் போராட்டத்தின் போது இந்த முழக்கம் இந்தியர்களை இணைக்கும் ஒரு நூலாக மாறியது. படிப்படியாக இது வெறும் முழக்கமாக மட்டுமல்லாமல், தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாறியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர் செம்பகராமன் பிள்ளை ‘ஜெய் ஹிந்த்’ என்று பயன்படுத்தத் தொடங்கினார். மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே அவர் அதை ஒரு […]

சென்னையில் இந்த ஆண்டின் முதல் மேகவெடிப்பு (Cloudburst) சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மிமீட்டருக்கும் மேல் மழை கொட்டியதால், பல பகுதிகளில் சாலைகள் சில நிமிடங்களில் வெள்ளம் சூழ்ந்தன. இதுகுறித்து வானிலை ஆர்வலரும், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் ஏற்கனவே கனமழை தாக்கியுள்ள நிலையில், அடுத்ததாக தென்சென்னையும் அதேபோல பலத்த மழையை […]

ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் போலியான URL Link-களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்; சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் […]

முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமிக்கு இருக்கப்படும் […]

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான […]

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. […]

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது. ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் […]