அஜித் குமார் மரண வழக்கு பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் […]

அரசு மானியம் வழங்கும் இந்த திட்டத்தில் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஏழை, எளிய மக்கள் மின் கட்டணங்களைக் குறைத்து நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சூரிய சக்தி முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பொதுமக்க இனி தங்கள் வீடுகளின் கூரைகளில் நிறுவப்பட்ட சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம், இந்த செயல்முறையை அணுகக்கூடியதாகவும் சிக்கனமாகவும் […]

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இன்று சிவகாசி அருகே சின்னக்காம்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இன்று காலை வழக்கம் போல் சுமார் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது […]

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சி காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

சிவகங்கை இளைஞர் மரணம் தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை, பரப்புரை இன்று தொடங்கி வைக்கிறேன்.. மொத்தம் 45 நாட்கள் நடைபெற உள்ளது. பாஜக அரசால் தமிழும், தமிழ்நாடும் பாதிக்கப்படுவதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது.. எதிர்க்கட்சி ஆளும் […]

சிவகங்கையில் நகை திருட்டு வழக்கில், காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த இளைஞர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுதொடர்பாக 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறையின் அராஜகத்தால் நடந்த கொலை […]

சிவகங்கை லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது லாக் அப் மரணம் தொடர்பான வீடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று […]

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் 18 வயதான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் நேற்று மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார். மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த […]