சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி […]

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் வாங்குபவர்களான இந்தியா மற்றும் சீனா மீது 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள டிரம்ப், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்திய, சீனா மீது பெரும் வரிகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , வாஷிங்டனில் மூத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் […]

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க […]

மகா+ஆலயம் என்பதே மகாளயம். அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த 16 நாட்களில் எமதர்மனின் அனுமதியோடு, நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நமது சந்ததியினர் தங்களை நினைக்கிறார்களா, நீர் மற்றும் உணவு வழங்குவார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அவர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நாம் தானங்கள் செய்வது மிகவும் அவசியம். இந்த […]

ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்று பழமொழி சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் பெண் சக்தியைப் போற்றும் மிக முக்கியமான பண்டிகையாக நவராத்திரி விளங்குகிறது. ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட தவறியவர்கள், நவராத்திரி காலத்தில் குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை போன்ற வழிபாடுகளைச் செய்து அம்பிகையின் அருளைப் பெறலாம். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி […]

தென்னாப்பிரிக்கா லீக் 2026க்கான ஏலத்தில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பரபரப்பை ஏற்படுத்தி வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார். இந்த வீரர் ஏலத்தில் ஆடம் மார்க்ராமை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தென்னாப்பிரிக்காவின் T20 லீக் SA20 இன் வரவிருக்கும் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்து வருகிறது. இந்த பெரிய ஏல நிகழ்வில் உலக கிரிக்கெட்டில் இருந்து பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். இந்த லீக்கின் நான்காவது சீசன் டிசம்பர் […]

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் […]

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை […]

நேபாளத்தின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து, நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் […]